மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையிலும் கூட பல நிறுவனங்கள், வங்கிகள் டிசம்பர் காலண்டில் நல்ல லாபம் கண்டுள்ளன. இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கியான ஃபெடரல் வங்கி, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 32 சதவிகிதம் அதிகரித்து, 440.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 333.63 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ப்ளும்பெர்க் கருத்து கணிப்பில் மதிப்பிடப்பட்ட 412.7 கோடி ரூபாய் லாபம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 440.64 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகர வட்டி வருவாய் அல்லது கடன்களில் ஈட்டப்பட்ட வட்டி மற்றும் வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட்ட வட்டி ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, 7.21 சதவிகிதம் அதிகரித்து 1,154.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,077.29 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
முக்கிய கட்டணம் உள்பட மற்ற வருவாய் நிலவி வரும் மந்த நிலையிலும் கூட, மூன்று மாதங்களில் 18.03 சதவிகிதம் அதிகரித்து 407.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 345.55 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணம் வாராக்கடன் வீழ்ச்சியாகும். குறிப்பாக சொல்லப்போனால் டிசம்பர் காலாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2.99 சதவிகிதமாக இருந்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.07 சதவிகிதமாகவும், இதுவே முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.14 சதவிகிதமாகவும் இருந்துள்ளது கவனிக்கதக்கது.
இதே செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கி 51.58% நிகரலாபம் அதிகரித்து 425.34 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 280.61 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வட்டி வருவாய் 1,183 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12% அதிகமாகும்.
இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது 2.35% அதிகரித்து 93.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக பிஎஸ்யில் 94.45 ரூபாயாக இருந்துள்ளது. இதே குறைந்த பட்சம் 88 ரூபாயாகவும் இருந்துள்ளது.