கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்படி தான் கடலூரிலும் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 150 கிராமங்களில் வசிக்கும் 1.95 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வரின் நிவாரண உதவியாக தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 9.75 லட்சம் கிலோ அரிசி, 1.95 லட்சம் கிலோ துவரம் பருப்பும் வழங்கப்படவுள்ளது. மழை நீரில் பயிர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

48,907 ஹெக்டேர் நெற்பயிர்கள், 942 ஹெக்டேர் மக்காச்சோளம், 1,612 ஹெக்டேர் உளுந்து, 4,526 ஹெக்டேர் பிற பயிர்கள் என மொத்தம் 82,375 ஹெக்டேர் பயிர்கள் மழையின் காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளன.
அதோடு மழையின் காரணமாக 1113 குடிசை வீடுகள், 291 காங்கிரிட் வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன. பொதுவாகவே கடலூர் மாவட்டம் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். அதேபோல இந்த முறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக செதமடைந்த வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 10,000 ரூபாய் நிவாரணமும், பகுதி அளவு சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 6,500 ரூபாய் நிவாரணத்தையும் அரசு அறிவித்திருக்கிறது. கனமழை கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. 49 மாடுகள், 66 கன்றுகள், 101 ஆடுகள், 14,035 கோழிகள் ஆகியவையும் பலியாகியுள்ளன.
ஒவ்வொரு பசுவுக்கும் 37,500 ரூபாயும், கன்று குட்டிக்கு 20,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 4,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதோடு இந்த மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட 26,247 பேருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் 406 முகாம்களை நடத்தியது. இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 37,400 முகாம்களை நடத்தியது.
அதோடு மாவட்ட நிர்வாகம் 5,788 குடும்பங்களை தங்க வைப்பதற்காக 37 தங்கும் இட முகாம்களை அமைத்துள்ளது. இதில் 3.14 லட்சம் உணவுப் பொட்டலங்களையும் விநியோகம் செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையை மீட்டமைக்கும் பொருட்டு 2000 தொழில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications