கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் உடன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்டிங் செய்யாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கை டிஜிட்டல் முறையில் பெறச் சனிக்கிழமை நிதியமைச்சகத்தின் அல்வா நிகழ்ச்சியில் புதிய யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் செயலி
இந்தப் புதிய மொபைல் ஆப்-ல் மத்திய பட்ஜெட் குறித்த 14 அறிக்கைகள், வருடாந்திர நிதியியல் அறிக்கை, நிதியியல் அறிக்கை, டிமாண்ட் பார் கிரான்ட்ஸ் எனப் பலதரப்பட்ட அறிக்கைகளைப் பெறலாம். இதன் மூலம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பட்ஜெட்டிலும் புகுத்தப்பட்டு உள்ளது.
மொபைல் ஆப்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் பட்ஜெட் அறிக்கைகளை டவுன்லோடு செய்வது மட்டும் அல்லாமல் பிரிண்ட் செய்யவும் முடியும். இதோடு சர்ச், ஜூம் இன், ஜூம் அவுடன், ஸ்கோரிலிங் எனப் பயன்படுத்துவதற்கு எளிதான அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் இந்தச் செயலி தற்போது ஆன்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்திலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி
மேலும் இந்த மொபைல் செயலியில் பிப்ரவரி 1ஆம் தேதி 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் முடிந்த பின்பு அறிக்கைகள் மொபைல் செயலியில் வெளியிடப்படும்.
யூனியன் பட்ஜெட் இணையதளம்
இந்தச் செயலியை மத்திய பொருளாதார விவகார துறை அறிவுரையின் கீழ் நேஷ்னல் இன்பார்மேட்டிக்ஸ் சென்டர் அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். இது தான் இணையத் தள முகவரி ( www.indiabudget.gov.in).