டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க மத்திய அரசு ஒரு புறம் கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல புதிய திட்டங்கள் அடங்கிய இரண்டாம் கட்ட நிதி பேக்கேஜ் அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு இந்த நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளது.