அதானி குழும விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.. !

மும்பை: அதானி குழுமத்தின் மீதான நிதி முறைகேடு புகார் குறித்து இந்தியா கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் மீதான புகார் தொடர்பாக நமது நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.

நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள் வலிமையும், திறனும் உடையது. இதுபோன்ற விவரங்களை கையாளும் ஆற்றல் என்பது அவர்களுக்கு உள்ளது.

 சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள்

சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள்

அதோடு அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். இப்போது மட்டும் அல்ல, அவர்கள் எப்போதும் சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள் என தெரிவித்துள்ளார்.

ஆக விரைவில் இந்த நிதி குழுக்கள் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள முறைகேடு குறித்தான அறிக்கையை விரைவில் தெளிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதிய வருமான வரி விலக்கு

புதிய வருமான வரி விலக்கு

புதிய வருமான வரி திட்டம் இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சம். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும்.

பட்ஜெட் 2023ல் 7 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு புதிய வருமான வரி திட்டத்தில் வரி இல்லை என்பது, சாமானிய மக்கள் மத்தியில் மிக நல்லதொரு விஷயமாகவும் பார்க்கப்பட்டது. இது சம்பளதாரர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

 

கிரிப்டோகரன்சி குறித்து கருத்து

கிரிப்டோகரன்சி குறித்து கருத்து

டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோகரன்சிகள் 99% தொழில் நுட்பத்துடன் இணைந்த ஒன்றாகும்.இதற்கென ஒரு பொதுவான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த விதிமுறைகள் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் அளவில் தரமான ஒன்றாக இருக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா ஜி20 நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 நிதி அமைப்புகள்

நிதி அமைப்புகள்

இந்தியாவின் ரிசர்வ் வங்கி, செபி மற்றும் ஐஆர்டிஏஐ, கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் உள்ளிட்ட, பல அமைப்புகளும் நிதி கண்காணிப்புகளை மேற்கொள்ள கூடியவை.

ஆக அதானி குழுமத்தின் மீதான முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் பலத்த குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதானி ஹிண்டர்ன்பர்க் சர்ச்சை

அதானி ஹிண்டர்ன்பர்க் சர்ச்சை

அதானி குழும நிறுவனங்களின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றசாட்டினை, அதானி குழுமம் தவறானது என்றும் இது ஆதாரமற்ற தகவல்கள் என்றும் விளக்கம் கொடுத்திருந்தது. எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டது.

 விரைவில் தாக்கம் இருக்கலாம்

விரைவில் தாக்கம் இருக்கலாம்

ஆக இது குறித்து இந்த நிதி அமைப்புகள் ஆராய்ந்து விரைவில் தங்களது முடிவினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது நிதி ரீதியாக மட்டும் அல்லாது, எதிர்கட்சிகளூம் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பானது வந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+