காசோலை குறித்த பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர மத்திய நித்யமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றது.
ஆக விரைவில் காசோலைகள் குறித்து விரைவில் கடினமான நடவடிக்கைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுதினமும் காசோலைகள் பவுன்ஸ் ஆவது குறித்து பல செய்திகளை படித்து வருகிறோம். என்ன தான் கட்டுப்பாடுகள் என்பது இருந்து வந்தாலும், மோசடிகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
மத்திய அரசின் திட்டம்
குறிப்பாக காசோலை குறித்த மோசடிகளில் பலவும் செக் பவுன்ஸ் குறித்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. காசோலை வழங்குபவரின் பிற கணக்குகளில் இருந்து பணத்தை கழிப்பது, இதுபோன்ற காரணங்களினால் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவதை தடுப்பது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.
பல பரிந்துரைகள்
மத்திய அரசின் இந்த திட்டமானது தொடர்ந்து காசோலை பவுன்ஸ்கள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய பரிசீலனைகளை செய்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய நிலையில், அந்த கூட்டத்தில் பல பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோசடிகள் குறையலாம்
இதுபோன்ற வழக்குகள் சட்டத்தின் மீதான சுமையை அதிகரிப்பதாகவும், எனவே இதனை தடுக்க சில பரிந்துரைகள் அந்த கூட்டத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் பணம் செலுத்துபவர்கள் காசோலைக்கு கட்டாயம் பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு கட்டாயம் தள்ளப்படுவர். கணக்கில் பணம் இல்லாமல் காசோலை கொடுக்கும் நடைமுறையை இது தடுக்க இது வழிவகுக்கலாம்.
செக் பவுன்ஸ்
காசோலை வழங்குபவர் பணம் செலுத்துவதற்காக வங்கியில் ஒரு காசோலையை வழங்கும்போது அது பணம் இல்லாமல் திரும்பும்போது செக் பவுன்ஸ் என்று கூறப்படுகிறது. சட்டப்பிரிவு 138ன் படி, செக் பவுன்ஸ் ஆனால், பணம் பெறுபவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதற்கு அபாரதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது.
PHDCCI-ன் கோரிக்கை
சமீபத்தில் செக் பவுன்ஸ் வழக்குகளில் காசோலை வழங்குபவர் தனது நடவடிக்கைக்கு பொறுப்பேற்கவும், சில நாட்களுக்கு பணம் எடுப்பதை கட்டாயமாக நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கையை எடுக்குமாறு phdcci அமைப்பு கோரிக்கை விடுத்தது. மேலும் செக் பவுன்ஸ் செய்த நாள் முதல் 90 நாட்களுக்குள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என PHDCCI கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications