நடந்து முடிந்த 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று வருமான வரி அனுமதி சான்றிதழ் தொடர்பான அறிவிப்பு. அதன்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு கருப்பு பணச் சட்டத்தின் கீழ் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் இடையே பெரும் விவாதம் எழுந்தது.
வெளிநாட்டு பயணங்களுக்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் என்ற பட்ஜெட் அறிவிப்பால் சமூக ஊடகங்களிலும் பல காரசாரமான கருத்துகள் பரவின. இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்வோர் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் 230-வது பிரிவின்படி, அனைத்து நபர்களும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டியதில்லை. சிலர் மட்டுமே இந்த சான்று பெற வேண்டியிருக்கும். அதன்படி ஒரு நபர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால், வருமான வரி சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைக்கு உட்பட்டிருந்தால் வரி சான்றிதழ் அவசியம்.
மேலும் ஒரு நபரின் மீது ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வரி பாக்கி இருந்தாலும் வரி அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த சூழ்நிலைகளில் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் நபர்கள் வரி அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டிய காரணங்களை பதிவு செய்து, பிரதான முதன்மை வருமான வரி ஆணையர் அல்லது முதன்மை வருமான வரி ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒரு நபருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரி சான்றிதழ் கேட்கப்படும் நபருக்கு எந்தவித வரி பாக்கியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரி அதிகாரிகள் இந்த சான்றை வழங்க வேண்டும்.
கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதிக வரி பாக்கி உள்ளவர்களுக்கு மட்டுமே வரி அனுமதி சான்றிதழ் தேவைப்படும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிக வரி பாக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் வகையிலும், இந்த அறிவிப்பு உள்ளது. மேலும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கும் நபர்களை கண்டுபிடிக்கவும் உதவியாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications