ஈரானில் ஒவ்வொரு நாளும் போர் தீவிரம் அடைந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் என்பதிலிருந்து தாண்டி ஈரான் போரின் முகம் தற்போது மாறி வருகிறது. இதற்கு காரணம் ஈரான் அண்டை நாடுகளின் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஈரான் போர் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. மூன்று வார காலமாக இந்த பிராந்தியத்திலிருந்து சரக்கு கப்பல்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றன. இது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வித்திட்டு பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி மற்றும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயரும். எனவே பல்வேறு நாடுகளும் கோரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் இந்தியா , ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், ஈரான் போரில் இந்தியா மத்தியஸம் செய்ய வேண்டும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும் என யோசனை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கும் அலெக்சாண்டர் ஸ்டப், தற்போது போர் நிறுத்தம் தேவை , இந்தியா நினைத்தால் அதனை செய்ய முடியும் என கூறியுள்ளார். இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவுடனும் நல்ல உறவினை பேணுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த நட்புறவை கொண்டவராக இருக்கிறார். இந்தியா ஈரானுடனும் சிறந்த நட்பு கொண்டிருந்தது.

அண்மையில் கூட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருவதற்கு அனுமதி பெற்றார். அந்த வகையில் இந்தியா நினைத்தால் அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிராந்தியத்தில் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை மற்றும் அமைதியை நிலைநாட்ட முடியும் என சர்வதேச அளவிலான குரல்கள் எழ தொடங்கி இருக்கின்றன.
அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ச்சியாக ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஹார்முஸ் ஜலசந்தி வழியே இந்திய கப்பல்களை அனுமதிப்பது, ஈரானில் இருக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவருடைய பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
முன்னதாக பிரதமர் மோடியும் ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டிருக்கிறார். அதேபோல வர்த்தக போக்குவரத்துக்கு எந்த ஒரு தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது குறித்து மோடி அப்போது வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த சூழலில்தான் இந்தியா தலையிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தையும் மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் நிலைநாட்ட முடியும் என பின்லாந்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் சர்வதேச விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்யக்கூடிய அந்தஸ்துக்கு தற்போது இந்தியா முன்னேறி இருக்கிறது. ஒருவேளை பின்லாந்து யோசனை ஏற்று இந்தியா மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்தால் உலகமே இந்தியாவுக்கு நன்றி கூறும்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஈரான் போர் விவகாரத்தில் 19 இந்தியர்கள் கைது!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

தமிழ்நாட்டில் எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளது? – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தகவல்

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இண்டிகோ- எங்களுக்கு வேற வழி தெரியல.. சிஇஓ ராஜினாமா செய்த உடன் கட்டண உயர்வு..!!



Click it and Unblock the Notifications

