கொரோனா-வால் ஏற்பட்ட லாக்டவுனில் அனைத்து வர்த்தகமும் முடங்கியிருந்த நிலையில் வங்கி துறை மட்டும் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்து இயங்கி வந்தது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பணப் பரிமாற்றம் எவ்விதமான தடையும் இல்லாமல் இயங்கியது. இதே காலகட்டத்தில் நாட்டின் முன்னணி பேமெண்ட்ஸ் வங்கியான பினோ பேமெண்ட்ஸ் வங்கி சுமார் 2 லட்ச கணக்குகளைத் திறந்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் செய்யப்பட்டு இன்று வரையில் குறிப்பிட்ட அளவிலான லாக்டவுன் இருந்து வருகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இன்று வரையில் சுமார் 2 லட்ச கணக்குகளைத் திறந்து சக வங்கிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த போதிலும், தங்களிடம் இருக்கும் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்து இந்தக் காலகட்டத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
ஜூன் காலாண்டு
பினோ பேமெண்ட்ஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 2.4 லட்சம் பேர் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர், இதன் மூலம் வங்கியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் கணக்குகளைத் திறந்த 2.4 லட்சம் பேரில் 80 சதவீதம் பேர் சேமிப்பு கணக்கையும், மீதமுள்ளவர்கள் நடப்பு கணக்கு திறந்துள்ளனர் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பேங்கிங்
புதிதாகக் கணக்குத் துவங்கியவர்கள் அனைவரும் வங்கியின் டிஜிட்டல் சேவையைப் பெற்றுள்ளனர், அதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்களது வர்த்தகத் தளத்தில் பணம் உடனடியாகப் பெற்றுள்ளனர்.
டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளம்
எங்கள் வங்கியின் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தள விளம்பரங்கள் மூலம் அதிகளவிலான இளைய தலைமுறையினரை வங்கி தளத்தில் சேர்க்க உதவியுள்ளது. எங்களது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் இளைய தலைமுறையினர் தான் எனப் பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை விற்பனை அதிகாரி சைலேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
பினோ பேமெண்ட்ஸ் வங்கி
2017 ஏப்ரலில் துவங்கப்பட்ட பினோ பேமெண்ட்ஸ் வங்கி, முதல் நாளிலேயே இந்தியாவில் 25,000க்கும் அதிகமான இடத்தில் வங்கியியல் முனைகளையும், 410 வங்கி கிளைகளையும் கொண்டு துவங்கியது.
2006ஆம் ஆண்டு ஒரு டிஜிட்டல் பேமெண்ட் டெக்னாலஜி நிறுவனமாகத் துவங்கப்பட்ட பினோ தற்போது பினோ பேமெண்ட்ஸ் வங்கியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications