வெளிநாட்டு வங்கிக்கு தலைமை தாங்கிய முதல் இந்தியர் என்ற முக்கிய பெருமை கொண்ட ராணா தல்வார் தனது 76 ஆவது வயதில் காலமானார். அவர் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் தலைவராக இருந்தார். இவர் டிஎல்எப் குரூப் தலைவர் கே பி சிங்கின் மருமகன் ஆவார். உடல்நல குறைவால் சனிக்கிழமையன்று காலமானார், இவரின் மறைவு அவரின் மனைவி ரேணுகா, மகன் ராகுல் ஆகியோரை தீரா சோகத்தில் ஆழ்த்தியது.
டிஎல்எப் தவிர அவர் அஸாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பொரேஷன் லிமிடெட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் போர்டுகளில் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவுக்கு டிஎல்எப் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

1948 இல் பிறந்த தல்வார், டெல்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சிட்டி வங்கியில் வங்கியாளராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். சிட்டி வங்கியில் தனது பணியின் போது, ராணா தல்வார் என்று அழைக்கப்படும் குர்வீரேந்திர சிங் தல்வார், ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வங்கியின் சில்லறை வணிகங்களை கட்டியெழுப்ப பொறுப்பேற்றார்.
இதன் பின்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள சிட்டி வங்கியின் அனைத்து சில்லறை வணிகங்களுக்கும் பொறுப்பேற்றார். அவர் சிட்டி பேங்க்/சிட்டிகுரூப் பாலிசி மற்றும் ஆப்பரேட்டிங் கமிட்டிகளில் உறுப்பினராக இருந்தார்.
ராணா தல்வார் 1996 இல் சிட்டி வங்கியை விட்டு வெளியேறி ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பிஎல்சி-யில் குளோபல் தலைமை நிர்வாகியாக சேர்ந்தார். FTSE 25 நிறுவனம் மற்றும் ஒரு பெரிய உலகளாவிய வங்கியின் தலைமை நிர்வாகி ஆன முதல் ஆசியர் ஆவார்.
ANZ வங்கியிடமிருந்து கிரைண்ட்லேஸ் வங்கியை கையகப்படுத்துவது உட்பட, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பிஎல்சி-யை ஒரு முன்னணி வளர்ந்து வரும் சந்தை வங்கியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
தல்வார் 2002 இல் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பிஎல்சியை விட்டு வெளியேறி, அதன் நிறுவனர் தலைவராகவும், பெரும்பான்மை பங்குதாரராகவும் ஒரு தனியார் பங்கு நிறுவனமான சேபர் கேபிட்டல் வேர்ல்டுவைடை நிறுவினார். இந்தியாவில் சேபர் கேபிட்டலின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்று செஞ்சுரியன் வங்கியில் ஒரு மூலோபாயப் பங்குகளை வாங்குவதாகும். தல்வார் பின்னர் HDFC வங்கியுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒழுங்குமுறை ஆவணத்தில் டிஎல்எப் நிறுவனத்தின் குழுவில் அவரது பங்களிப்புகளை ஒப்புக்கொண்டது, அவரது மதிப்புமிக்க வழிகாட்டுதல், தொலைநோக்குப் பார்வையால் நிறுவனம் பெரிதும் பயனடைந்தது.
தல்வாரின் மறைவு நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications