இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பார். ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை கூட்டம் இவருடைய கரியருக்கு மிகவும் முக்கியமானது. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா..? ஆர்பிஐ கவர்னராக இருப்பதற்கு முன்பு இவர் என்ன செய்துக்கொண்டு இருந்தார்..?

சஞ்சய் மல்ஹோத்ரா முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் போலவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார், சஞ்சய் மல்ஹோத்ரா 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவர். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளது மட்டும் அல்லாமல் அரசு பணியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவத்தை கொண்டவர்.
சஞ்சய் மல்ஹோத்ரா, கான்பூரில் உள்ள IIT கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார், அதை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆர்பிஐ கவர்னராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு நிதிச் சேவைகள் துறையின் செயலாளராக, இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதற்கு முன், அவர் பொதுத்துறை நிறுவனமான REC இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
2022 முதல் மத்திய வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், நேரடி மற்றும் மறைமுக வரிக் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மல்ஹோத்ரா ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படி மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளில் சுமார் 33 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர் தான் தற்போதைய ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா. நிதி, மின்சாரம், வரித்துறை, தகவல் தொழில் நுட்பம், சுரங்கம் என பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இதேவேளையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் ஆர்பிஐ-யின் நாணய கொள்கை குழுவில் இருந்த 3 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 3 பேர் ஆர்பிஐ ஊழியர்கள், மீதமுள்ள 3 பேர் வெளி உறுப்பினர்கள் ஆவர்.
இந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு தான் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கும், அதிகரிப்பதற்கும் பொறுப்பானது. இந்த நிலையில் ராம் சிங், நாகேஷ் குமார் மற்றும் சௌகதா பட்டாச்சார்யா ஆகியோர் மூன்று பதிய வெளிப்புற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாத கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை குழு கூட்டம் ஆர்பிஐ கவர்னர் முதல் 3 புதிய உறுப்பினர்கள் வரையில் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications