வேலையை விட்டு சென்ற ஊழியரை தயவு செய்து திரும்ப வாருங்கள் என அழைத்து 55 சதவீத ஊதிய உயர்வு கொடுத்த நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் இதற்கு முன்பு பணி செய்த நிறுவனத்தில் இருந்து தான் ராஜினாமா செய்ததாகவும், அந்த நிறுவனம் மீண்டும் கெஞ்சி கூத்தாடி தன்னை பணியில் சேர்த்துக் கொண்டது என்றும் பதிவு செய்து இருக்கிறார்.
ரெடிட் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் 15% ஊதிய உயர்வு கேட்டேன் ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர் என கூறியிருக்கிறார். உடனே தான் வேலையை ராஜினாமா செய்ததாகவும், அதே நிறுவனம் சில மாதங்களுக்கு உள்ளே தனக்கு 55 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து பதவி உயர்வும் தந்து வேலைக்கு எடுத்துக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

என்னுடைய பாஸிடம் 15% ஊதிய உயர்வு கேட்டேன் அவர் இல்லை என்றார், நான் வேலையை விட்டு சென்றுவிட்டேன். சில மாதங்களில் அவரே என்னை அழைத்து 55 சதவீதம் ஊதிய உயர்வு தந்து பதவி உயர்வு தந்து மீண்டும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்த கதையை நான் அனைவரிடமும் பகிர வேண்டும் என்பதற்காகவே தற்போது வெளியிடுகிறேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டபோது உங்களுக்கு போதி அனுபவம் இல்லை ,தற்போது எங்களிடம் பட்ஜெட் கிடையாது, நீங்கள் இன்னும் வளர வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தனர் . ஒரு காலகட்டத்தில் நான் விரக்தி அடைந்து வேலையை விட்டு சென்று விட்டேன் ஆனால் நான் சென்ற பிறகுதான் அவர்களுக்கு என்னுடைய மதிப்பு புரிந்து இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
அதாவது இவர் அந்த பணியை விட்டு சென்ற பிறகு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலரும் நிறுவனத்தின் சேவை முன்பு போல தரமாக இல்லை என்றும் புகார் தந்தார்களாம். மேலும் குறித்த தேதிக்குள் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என குறை கூறினார்களாம். இதன் காரணமாக அந்த நிறுவனம் மீண்டும் இவரையே திரும்ப அழைத்து அந்த பணியில் நியமனம் செய்திருக்கிறது. அப்போது இவருக்கு 55 சதவீத ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கினார்கள்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது ஒரு பயனர் இதைக் கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நிறுவனங்கள் ஒரு ஊழியரின் மதிப்பை உணர்ந்தால் தான் அவருக்கு உரிய சம்பளத்தையும் பதவியையும் வழங்குவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனக் கூறியிருக்கிறார். சிலரோ இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை, நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications