சண்டிகரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான மேக் மை டிரிப்புக்கு, அதன் வாடிக்கையாளருக்கு 39,000 ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த உத்தரவினை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்துள்ளது.
மேக் மை டிரிப் - டிக்கெட்
உண்மையில் என்ன தான் நடந்தது? எதற்காக நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை திரும்ப செலுத்த கூறியது வாருங்கள் பார்க்கலாம்.
ரஜத் ஷர்மா என்பவரும் அவரது குடும்பத்தினரும் மார்ச் 2019ல் பாக்டோராவிற்கு செல்லவும், சண்டிகரில் இருந்து திரும்பவும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக அப்போது கட்டணமாக 51,688 ரூபாயினை செலுத்தி, முன்பதிவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணம் திரும்ப தரப்படவில்லை
இதற்கிடையில் எந்த வித முன்னனிறிவிப்பும் இன்றி, அவர்கள் திரும்பும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தான் ரஜத் ஷர்மா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை இத்தோடு முடியவில்லை. பலமுறை முயற்ச்சித்த போதிலும் கூட ரத்து செய்யப்பட்ட விமான பயணத்திற்கான கட்டண தொகையை, திருப்பித் தரவில்லையாம். அதோடு விமானம் ரத்து செயப்பட்டதோடு வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடும் எதுவும் செய்யப்படவில்லை.
மற்றொரு விமானத்தில் பயணம்
இதற்கிடையில் ரஜத் ஷர்மா குடும்பத்தினர் மற்றொரு விமானத்திற்கு பதிவு செய்து, அதில் பயணித்துள்ளனர். அதன் கட்டணம் 36,469 ரூபாய் என்றும் கூறப்படுகின்றது..
பணத்தினை திரும்ப தராததால் மேக் மை டிரிப், வேறு வழியின்றி பழியினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது மாற்றியது
திவால் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ்
ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமோ இந்த நேரத்தில் செயலிழந்து விட்டது. அதோடு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முன்பு திவால் நடவடிக்கையில் இருந்தது குறிப்பிடத்தகக்து.
மேக் மை டிரிப் பயனர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக ஒப்புக் கொண்டுள்ளனர். விமானத்தினை விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதால், விமான நிறுவனமே பொறுப்பாகும் என்றும் கூறியது.
மேக் மை டிரிப்புக்கு குட்டு
இந்த நிலையில் தான் மேக் மை டிரிப் நிறுவனத்தை வாடிக்கையளாருக்கு திரும்ப வரும் கட்டணமான 29,080 ரூபாயினை திரும்ப செலுத்தவும், அதோடு வாடிக்கையாளரை அலைகழித்ததற்காக இழப்பீடாக 10,000 ரூபாயினையும் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுத்தே ஆகணும்?
இந்த உத்தரவினை எதிர்த்து மேக் மை டிரிப், மாநில ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது.
இதற்கிடையில் இதனை விசாரித்த மாநில ஆணையமும், அதனை உறுதி செய்துள்ளது. விமான டிக்கெட்டுகளை பதிவு செய்ய கட்டணம் வசூலித்த மேக் மை டிரிப், சரியான சேவையை செய்ய தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடும் செய்யப்படப்வில்லை. இதனால் மேக் மை டிரிப்பின் மேல் முறையீட்டினை ரத்து செய்து, மாவட்ட ஆணையத்தின் உத்தரவினை உறுதி செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications