இந்தியாவின் இ-காமர்ஸ் தளங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் வரலாற்று உச்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளன. எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் மொத்த ஈகாமர்ஸ் விற்பனை ரூ. 1 லட்சம் கோடியை ($11.9 பில்லியன்) தாண்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்திய மக்கள் மத்தியில் அதிகரித்த நுகர்வோர் செலவு மற்றும் சிறு நகரங்களில் இருந்து தேவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

தீபாவளி பண்டிகையின் போது சென்னை டிநகரில் மக்கள் கூட்டம் கடந்த 20 வருடத்தில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியது, ஈகாமர்ஸ் துறை வர்த்தகத்தைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது.
அக்டோபர் மாதம் துவங்கிய பண்டிகை கால விற்பனையில், முதல் வாரத்தில், ஃப்ளிப்கார்ட்டின் 'Big Billion Days’ மற்றும் அமேசானின் 'Great Indian Festival’ போன்ற பெரிய விற்பனை சலுகை மூலம் மொத்த விற்பனையில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 55,000 கோடி ($6.5 பில்லியன்) விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த அக்டோபர் மாத விற்பனையில் இரண்டு முக்கிய ஈகாமர்ஸ் தளங்களாக பிளிப்கார்ட், அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்கள் தான் முதன்மையான விற்பனைப் பிரிவாக இருந்துள்ளது. இந்த அக்டோபர் காலகட்டத்தில் நாட்டில் நடைபெற்ற மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் கிட்டத்தட்ட 65% ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டும் ஸ்மார்ட்போன் விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் விற்பனை பங்கீடு சுமார் 70% க்கும் அதிகமாக உள்ளது என தெரிகிறது.
மளிகைப் பொருட்கள், அழகு மற்றும் பர்சனல் கேர் பொருட்கள், வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் அதிகப்படியான பொருட்கள் விற்பனையாகியுள்ளது. இ-காமர்ஸ் தளங்கள் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கின் வளர்ந்து வரும் போக்கை இந்த தீபாவளி ஷாப்பி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
நாடு முழுவதும் சிறு நகரங்களில் மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பு, ஆன்லைன் பணம் செலுத்தும் முறை ஆகியவை எளிதாகிய காரணத்தால் இ-காமர்ஸ் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications