இந்தியாவில் ஈகாமர்ஸ் தளங்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் திடீரென தனது கிளை நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு கையகப்படுத்திய ஏஎன்எஸ் காமர்ஸ் (ANS Commerce) நிறுவனத்தை மூடுவதாக பிளிப்கார்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 200க்கும் அதிகமானவர்கள் வேலை இழக்க உள்ளனர். வரும் 31ஆம் தேதிக்கு பின்னர் இந்த நிறுவனம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏஎன்எஸ் காமர்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல், கிடங்கு ஏற்படுத்தி தருவது, ஈகாமர்ஸ் செயல்பாடுகளை கவனித்து கொள்வது என்பன உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மட்டுமில்லாமல் மற்ற டிஜிட்டல் முறைகளிலும் பொருட்களை விற்பனை செய்ய தேவையான உதவியை வழங்கியது.
2022 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே பிளிப்கார்ட் நிறுவனம் அதனை மூட முடிவு செய்துள்ளது. இதற்கான தெளிவான காரணங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தால் லாபகரமானதாக செயல்பட முடியவில்லை என்றும் இதன் காரணமாகவும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற காரணமாகவுமே பிளிப்கார்ட் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200க்கும் அதிகமான ஊழியர்களும் தற்போது வேலையை இழந்துள்ளனர். இது தங்களுக்கு பேதிர்ச்சியை தருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவன ஊழியர்கள், ஒரே ஒரு அறிவிப்பு தங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனம் இவர்கள் அனைவரையும் நல்ல ஒரு நிதி தொகுப்புடன் நான் வேலையை விட்டு அனுப்புவோம் என்ற உறுதியை தந்துள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு உள்ளே இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியுமா என முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளது.
நேரடியாக வாடிக்கையாளர்களிடம் தங்களுடைய பிராண்டுகளை கொண்டு சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என விரும்பிய நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது ஏஎன்எஸ் நிறுவனம். திடீரென இந்த நிறுவனம் மூடப்படுவது இந்த துறை சார்ந்த இயங்கும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது SaaS பிரிவில் ஈகாமர்ஸ் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்ற வினா எழுகிறது.
Story Written:Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications