பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பின்னி பன்சால் ஆப்டிரா ( Opptra ) என்ற ஒரு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்தியாவில் பின்னி பன்சால் மற்றும் சஞ்சய் பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் பிளிப்கார்ட் நிறுவனம். ஈ காமர்ஸ் பிரிவில் வெற்றிகரமாக இயங்கும் இந்த நிறுவனம் தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் வசம் சென்றுவிட்டது.
இந்நிலையில் பின்னி பன்சால் ஆப்டிரா என்ற புதிய ஸ்டார்ட் அப்பை தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Franchising தொழிலில் இருப்பவர்கள் அவர்களுடைய பிராண்டை ஆசிய சந்தை முழுவதும் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகளை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஆப்டிராவை பயன்படுத்திக் கொள்ளலாம் என பின்னி பன்சால் கூறியிருக்கிறார். ஆப்டிரா நிறுவனத்திற்காக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி வந்த மூத்த நிலை அதிகாரிகளை இவர் பணி அமர்த்தியுள்ளார்.
இவர்களில் ரஞ்சித் பாபு கிளவுட் டெயில் என்ற மிகப்பெரிய விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் அமேசான் இந்தியாவில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்தவர். இவர் ஆப்டிரா நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். கடந்த டிசம்பரில் அமேசானில் இருந்து வெளியேறிய இவர் ஆப்டிராவில் பணி செய்து வருவது தெரிய வந்துள்ளது.
அதேபோல லெண்டிங்கார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த கிரிதர் யாஷா, ஆப்டிரா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். முன்னர் ஸ்விக்கியில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஆனந்தராஜ் ஆப்டிரா நிறுவனத்தின் சர்வதேச சப்ளை விநியோக சங்கிலிக்கான தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.
ஆப்டிரா என்ற தாய் நிறுவனத்தின் கீழ் Exporio மற்றும் Terraspan என்ற இரண்டு நிறுவனங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியுள்ளன. எக்ஸ்போரியோ நிறுவனத்தை பொறுத்தவரை பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகளை தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் விரிவாக்கம் செய்வதற்கு உதவுகிறது. வீட்டு உபயோக மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உதவி செய்ய டெராஸ்பேன் பயன்படுகிறது.
தற்போதைக்கு ஆசிய நாடுகளை கவனமாகக் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் இது உலகின் எந்தப் பகுதியிலும் என்ற கருத்தாக்கத்தின் கீழ் உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றும் பன்சால் கூறியுள்ளார் .
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications