இந்தியாவில் அமேசான் நிறுவனம் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கியபோது மொத்த ஈகாமர்ஸ் சந்தையிலும் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது மறந்திருக்க முடியாது. அமேசான் நிறுவனத்தைச் சமாளிக்க இந்தியாவில் இருந்த அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடியை வாரி வழங்கி அதிகளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியது, இதில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களும் அடக்கம்.
இதேபோலத் தான் தற்போது இந்திய ரீடைல் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் களத்தில் இறங்கியுள்ளது. ஜியோ மார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கிய நாளில் இருந்து இந்தியாவில் இருக்கும் மொத்த ஈகார்மஸ் மற்றும் ஆன்லைன் ரீடைல் நிறுவனம் ஆடிப்போய் உள்ளது.
இதன் வெளிப்பாடாக, நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட்-இன் ஹோல்சேல் வர்த்தகப் பிரிவு, வால்மார்ட்-இன் ஹோல்சேல் வர்த்தக நிறுவனமான பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்-ஐ மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்
இந்தியாவில் இருக்கும் கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தான் பெஸ்ட் ப்ரைஸ். இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 28 கடைகளை வைத்து மிகப்பெரிய அளவில் கட்டமைப்பில் வர்த்தகம் செய்து வருகிறது. இது B2B வர்த்தகப் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் - பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பெருமளவிலான பங்குகளை வால்மார்ட் சுமார் 16 பில்லியன் டாலருக்கு கைப்பற்றி 2 ஆண்டுகள் முடியும் தருவாயில், இந்திய ரீடைல் சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை எதிர்கொள்ளப் பிளிப்கார்ட் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்-இன் இந்திய வர்த்தகத்தின் ரீடைல் பிரிவை மொத்தமாக வாங்க உள்ளது பிளிப்கார்ட்.
ரிலையன்ஸ் ரீடைல்
ஜியோமார்ட் வெறும் ஈகாமர்ஸ் நிறுவனமாக இருந்தாலும் அது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை அறிமுகமாகி 10 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்றும் பெருமளவிலான மக்கள் ரீடைல் கடைகளையே நாடி செல்கின்றனர்.
இதன் வாயிலாகத் தான் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு இந்தியாவில் சுமார் 11,500 கடைகளைக் கொண்டு சுமார் 3 மாதத்திற்கு 2,000 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்து வருகிறது.
ரீடைல் கடைகள்
ரீடைல் பிரிவில் வலிமையாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தற்போது ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு வந்துள்ளதால், ஈகாமர்ஸ் துறையில் மட்டுமே இருக்கும் நிறுவனங்கள் தற்போது ரீடைல் வர்த்தகத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இதன் வழியாகத் தான் பிளிப்கார்ட் தனது ஆன்லைன் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்தாமல் ரீடைல் கடைகளுக்குச் சேவை அளிக்கும் நோக்குடன் புதிய வர்த்தகத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளது.
போட்டி
பிளிப்கார்ட் தனது ஹோல்சேல் வர்த்தகப் பிரிவை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் முதலில் பேஷன் மற்றும் மளிகை பொருட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஹோல்சேல் பிரிவில் இருக்கும் ஜியோமார்ட், உதான், மெட்ரோ கேஷ் & கேரி மற்றும் அமேசான் B2B வர்த்தகங்கள் உடன் போட்டிப்போட உள்ளது.
ஊழியர்கள் மற்றும் வர்த்தகம்
பிளிப்கார்ட் தற்போது வால்மார்ட்-ன் பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்-ஐ மொத்தமாக வாங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் 28 கடைகளில் இருந்து தான் பிளிப்கார்ட் வர்த்தகம் செய்ய உள்ளது. இதேபோல் வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பிளிப்கார்ட் குழுமத்திற்கு மாற உள்ளனர்.
வர்த்தக விரிவாக்கம்
பிளிப்கார்ட் தற்போது வால்மார்ட்-ன் பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட் மூலம் சிறுசிறு மளிகை கடைகள், நிறுவனங்களுக்கான தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். மேலும் இதன் மூலம் பல புதிய வர்த்தகங்களைப் பெற ஆலோசனை செய்து வருகிறோம் எனப் பிளிப்கார்ட் குரூப் சிஇஓ கல்யான் கிருஷ்ணமூர்த்தித் தெரிவித்துள்ளார்.
மேலும் பளிப்கார்ட் இப்புதிய கைப்பற்றல் மூலம் B2B பிரிவில் இருந்து B2B பிரிவு வர்த்தகத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications