இந்திய ரீடைல் சந்தைக்குள் எப்படியாவது நுழைந்திட வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தில் இருந்த வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது ஆட்டத்தைச் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறது. கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் நாடு முழுவதும் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், இந்நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் இன்று வால்மார்ட் தலைமையிலான பிளிப்கார்ட் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
முதல் கூட்டம்
21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீஇஓ கிரிஷ் கல்யாணமூர்த்தி பிளிப்கார்ட் பாதுகாப்பாகவும், நிதியியல் ரீதியாக வலிமையாகவும் உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டாம், தற்போது எங்களுடைய முக்கியமான குறிக்கோள் ஊழியர்களின் பாதுகாப்பு தான் என்று தெரிவித்துள்ளார் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் கவலை
கொரோனாவின் தாக்கத்தின் காரணமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஊழியர்களைக் கண்டிப்பாகப் பணிநீக்கம் செய்யும், அது மட்டும் அல்லாமல் சம்பளத்தையும் குறைக்கும் என இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பல நாட்களாக விவாதம் நடந்து வந்தது.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கிரிஷ் கல்யாணமூர்த்தி பேசியுள்ளார்.
ஸ்டார்ட்அப்
கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் குறைந்துவிட்டதாலும், முதலீடு கிடைக்காத காரணத்தினாலும் ஸ்டார்ட்அப் ஐடி நிறுவனத்தை நடத்த போதுமான நிதி இல்லாமல் தவிக்கிறது. இதனால் பெரிய அளவில் அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஸ்டார்ட்அப் ஐடி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12 லட்சம் ஊழியர்கள்
இந்தியாவில் ஐடி துறையில் 45 - 50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 10 - 12 லட்சம் பேர் ஸ்டார்ட்அப் நிறுவன பணிகளில் உள்ளனர். இந்தப் பாதிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் பெரும் ஐடி நிறுவனங்களிலும் நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications