இந்தியாவில் யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சேவையை பயன்படுத்துவது எளிமையாக இருப்பதால் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ செயலிகளின் ஆதிக்கம் வந்துவிட்டது.
ஏற்கனவே இந்திய சந்தையில் கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பிளிப்கார்ட் யுபிஐ என அழைக்கப்படுகிறது. பொதுவாக ஈ – காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பேமெண்ட் வசதியை வழங்க யுபிஐ செயலிகளை ஒரு வழியாக பயன்படுத்துகின்றன.
பெரும்பாலும் இதற்கு மூன்றாம் தரப்பு முகமைகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க ஏற்கனவே அமேசான் நிறுவனம் அமேசான் பே -ஐ பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது போல், தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் அதே பாணியை பின்பற்றியுள்ளது.
வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பிளிப்கார்ட் யுபிஐ செயலியை பயன்படுத்தலாம் என்றும் இது பயன்படுத்துவது மிக எளிதானது என்றும் பிளிப்கார்ட்டின் ஃபின்டெக் மற்றும் பேமெண்ட்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் தீரஜ் அனேஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான போன்பே பெரும் UPI சேவையில் பெரும் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் வேளையில், பிளிப்கார்ட் யூபிஐ அறிமுகமாகியுள்ளது. போன்பே தனி நிறுவனமாக இயங்கி வருகிறது, இது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நேரடியாக வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனமாக உள்ளது.
ஏற்கனவே பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சூப்பர்காயின்கள், பிராண்ட் வவுச்சர்கள் மற்றும் பிற வெகுமதிகளை, பாதுகாப்பான மற்றும் வசதியான கட்டண விருப்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனேஜா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளிப்கார்ட் செயலியின் உள்ளேயும் வெளியேயும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கட்டணங்களுக்கான பிளிப்கார்ட் யுபிஐ வசதி முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் முதலில் பிளிப்கார்ட் செயலியில் யுபிஐ ஐடியை உருவாக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பணம் செலுத்தலாம். வேறு எந்த செயலிக்கும் செல்லாமல் நேரடியாக பில்களை செலுத்தலாம்.
மிந்த்ரா, பிளிப்கார்ட் ஹோல்சேல், பிளிப்கார்ட் ஹெல்த்+ மற்றும் க்ளியர்டிரிப் உள்ளிட்ட பிளிப்கார்ட் குழுமம் நிறுவனங்களில் இந்த யுபிஐ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய வசதி மூலம், பிளிப்கார்ட் நிறுவனமும் வாடிக்கையாளர்களும் அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே போன்ற மூன்றாம் தரப்பு யுபிஐ பயன்பாடுகளை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது.
பிளிப்கார்ட் நிறுவனத்தை பொறுத்தவரை 50 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் மற்றும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதத்தில், மொத்தம் 18.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 1210 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் பிளிப்கார்ட் செயலி வழியே செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 61% அதிகம். எனவே இந்த புதிய வசதி பிளிப்கார்ட்டிற்கு லாபம் அளிக்கும் என்றே கருதப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications