அவசர கடன் திட்டத்திற்குப் புதிதாக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அசத்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் வர்த்தக சந்தையையும், கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும் சரிவில் இருந்து மீட்டு எடுக்க அறிவிக்கப்பட்ட திட்டம் தான் அவசர கடன் உத்தரவாத திட்டம்.

அவசர கடன் திட்டத்திற்குப் புதிதாக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அசத்தல்..!

அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் 1.0, 2.0, 3.0 என சுமார் 2.69 லட்சம் கோடி ரூபாய் தொகையை இதுவரை 1.1 கோடி நிறுவனங்களுக்கு 12 பொதுத்துறை வங்கிகள், 25 தனியார் வங்கிகள், 31 NBFC நிறுவனங்கள் மூலம் கடன் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் தொகையை அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம்.. யாருக்கு லாபம்..?! என்ன லாபம்..? ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம்.. யாருக்கு லாபம்..?! என்ன லாபம்..?

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் தொடுதல் வர்த்தகம் கொண்ட துறை நிறுவனங்களுக்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், மே 2020 முதல் அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்கு சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM nirmala announces Additional 1.5 lakh crore for Emergency credit line guarantee scheme

FM nirmala announces Additional 1.5 lakh crore for Emergency credit line guarantee scheme
Story first published: Monday, June 28, 2021, 17:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X