இந்திய நிதியமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட வரியை (Windfall Tax) நீக்குவது குறித்து ஆய்வு செய்யும் என பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் முதன்முதலில் விதிக்கப்பட்ட இந்த விண்ட்ஃபால் வரி, தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதாக உள்ளது என தருண் கபூர் கூறினார். ஏனெனில் உலகளாவிய எண்ணெய் விலை 2022-ஐ விட கடுமையாகக் குறைந்துள்ளது. இப்படியிருக்கும் போது இப்போது வரி விதிப்பது சரியில்லை என தருண் கபூர் கூறுகிறார்.

"நிதியமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யும். பெட்ரோலியம் அமைச்சகம் ஏற்கனவே மத்திய நிதியமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது" என்று கபூர் ஒரு நிகழ்ச்சியின் ஓரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடைசியாக மத்திய நிதியமைச்சகம் , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 11.9 சதவீதம் குறைத்து, ஆகஸ்ட் 31 முதல் டன் ஒன்றுக்கு ரூ.2,100லிருந்து ரூ.1,850 ஆக குறைக்கப்பட்டது. இப்போது டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி மீதான வரியை ஜீரோவாக தொடரும் என அறிவித்து இருந்தது.
Windfall Tax என்பது சில குறிப்பிட்ட தொழில்கள், பொருளாதார நிலைமைகளால் இயல்பான வர்த்தக நடைமுறையை தாண்டி அதிக லாபம் ஈட்டும் போது அரசாங்கம் விதிக்கும் ஒரு வரியாகும்.
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைத்தது. இதனால் இந்திய அரசு இந்தத் தொழில்களில் இருந்து அதிகப்படியான லாபத்தை வசூலிக்கும் நோக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் மீது சிறப்பு வரியை விதித்தது.
இந்த வரி கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களின் வருமானத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால், பின்னர் உலகளாவிய எண்ணெய் விலை குறைந்ததால் இந்த வரியை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்தது, ஆனால் முழுமையாக நீக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் 2022 ஆம் ஆண்டின் நிலவிய வர்த்தக சூழ்நிலை தற்போது இல்லை என்பதற்காகப் பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் புதன்கிழமை மத்திய நிதியமைச்சகம் வரியை நீக்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications