மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இருக்கும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் வழங்க வங்கிகளுக்கு புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.
11வது எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார கூட்டத்தில் நிதியமைச்சர் பேசிய போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் MSME துறையின் அதிரடியான வளர்ச்சிக்கு வித்திட, 2025-26 நிதியாண்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்ளுக்கு ரூ.6.12 லட்சம் கோடியும், 2026-27 நிதியாண்டில் ரூ.7 லட்சம் கோடியும் கடனாக வழங்க வங்கிகளை வலியுறுத்தினார்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாங்கள், துணை பொருட்கள், முக்கிய சேவைகளை அளிப்பதில் MSME நிறுவனங்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் நாட்டின் உற்பத்தி துறைக்கு எப்போதும் MSME தான் முதுகெலும்பு, இதன் காரணமாகவே MSME துறைக்கு அதிகப்படியான கடன்களை அளிக்க மத்திய நிதியமைச்சர் வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
இன்று மும்பையில் Making Aspiration of Viksit Bharat a Reality தலைப்பில் நடைப்பெற்ற கூட்டத்தில் பேசிய அவர் MSME கடனுக்கான டார்கெட் அறிவித்த அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளாதாக சுட்டிக்காட்டினார்.
2013-14ல் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, 2021-22ல் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வங்கிகள் இந்த வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் பேசினார் நிர்மலா சீதாராமன்.
டிஜிட்டல் சேவைகளின் வாயிலாக இந்தியாவில் அனைவருக்கும் நிதி சேவைகளை அளிக்கப்பட வேண்டும் என்றும், digital financial inclusion-னின் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும் வங்கிகள் செலவு குறைந்த டிஜிட்டல் சேவைகள் வாயிலாக நாட்டின் மூலை முடுக்குகள் உள்ள மக்களுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்க முடியும் என நம்புகிறார்.
More From GoodReturns

ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications