ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படும்.
இந்த மானியம் ஓய்வூதியப் பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால் சலுகை
இதன்படி இபிஎப்ஓ திட்டத்தில், பணியாளர்கள் பங்களிப்பாக 12%, நிறுவனத்தின் பங்களிப்பாக 12% என 24%த்தினை 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், இபிஎப்ஓ-வில் பதிவு செய்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால் மட்டும் இந்தச் சலுகை பெற முடியும்.
இது தான் நிபந்தனை
இந்த திட்டத்தில் சேரும் ஊழியர்களின் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் மார்ச் 1க்கு பின்பாக வேலையிழந்தவர்கள் அல்லது அக்டோபர் 1-க்கு முன் வேலை பெற்றிருத்தல் அவசியம்.
சலுகை நீட்டிப்பு
இவர்களின் சம்பளமும் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஊழியர்களையும், அதிகபட்சமாக 50 ஊழியர்களையும் சேர்க்க முடியும். இந்த திட்டம் 2021 ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருந்த நிலையில், தற்போது மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பயன்
இந்த திட்டத்தின் மூலம் 902 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ள நிலையில், 21.42 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். வேலை வாய்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஒரு ஊக்கமாகவும் அமையும் அதே நேரம் பணியமர்த்தலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications