மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அன்று, அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரையில் நடைமுறையில் இருக்கும் வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. நாட்டின் வரி முறையை நவீனமயமாக்கவும், எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், இந்த வரைவுச் சட்டத்தை அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு அனுப்பி, கருத்துக்கள் மற்றும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேல் பரிசீலனை செய்ய வேண்டும் என்று முறையாக கோரிக்கை விடுத்தார்.

மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றியது, புதிய வருமான வரி மசோதா தொடர்ந்து பரிசீலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த வழிவகுத்துள்ளது.
புதிய வருமான வரி கொள்கையை தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், இப்புதிய சட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு (select committee) அனுப்புவதன் முக்கியத்துவத்தை விளக்கி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் பகுதி துவங்கும் முதல் நாளுக்குள் அக்குழு தனது விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டி கேட்டுக்கொண்டார்.
மேலும், இக்குழுவின் செயல்பாட்டு விதிகள் தொடர்பான முடிவை சபாநாயகரின் விருப்பத்தின் அடிப்படையில் அமைக்கப்படும். இந்த குழுவின் ஆய்வு பாரபட்சமின்றி, முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய வருமான வரி மசோதாவில் பிப் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வரி மாற்றங்கள் மட்டுமே புதிதாக திருத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்து விதிமுறையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், வரி விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் சட்ட மொழியை எளிமைப்படுத்துவதாகும். இதன் மூலம், வரி செலுத்துபவர்கள் விதிகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் திருத்தப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications