மும்பை: அண்மையில் மறைந்த ரத்தன் டாடாவின் வழியை பின்பற்றி இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் 20,000 கோடி ரூபாயை மக்கள் நலப்பணிகளுக்காக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பணக்காரர்கள் இருந்தாலும் ரத்தன் டாடா போன்றவர்களை மக்கள் கொண்டாடுகின்றனர் . இதற்கு முக்கிய காரணம் அவர்களின் செல்வத்தில் பெரும் பகுதியை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக வழங்குகியுள்ளனர் , மேலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனர் என்பது தான். இப்படி மக்கள் நலனுக்காக பணத்தை வழங்க வேண்டும் அது தொழிலதிபர்களின் பங்கு என உணர்த்தியவர் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா அவர்களை பின்பற்றி ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அபிஷேக் லோதா தன்னுடைய சொத்தில் 20,000 கோடி ரூபாயை பல்வேறு நல பணிகளுக்காக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் லோதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக இருக்கும் பங்குகளை தங்கள் குடும்பத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாக அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார்.
மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் என்பது இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.10 லட்சம் கோடி ரூபாய் இதில் 72% பங்குகளை லோதா குழுமம் கொண்டுள்ளது.
மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்பது இந்தியாவில் லோதா என்ற பிராண்டின் ரியல் எஸ்டேட் விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் லோதா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது. இதன்படி அபிஷேக் லோதா மற்றும் அவரது குடும்பத்தினர் மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளில் 18 முதல் 19 சதவீத பங்குகளை இந்த அறக்கட்டளை பணிகளுக்காக வழங்க உள்ளனர்.
இதற்காக வரும் ஜனவரி மாதம் ஒரு குழு நியமனம் செய்யப்படும் என அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார் . கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அறக்கட்டளை வழங்கும் எனக் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த பங்குகளில் கிடைக்கும் ஈவுத்தொகையும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் டாடா குழுமம் தங்களுடைய சொத்தின் பெரும்பகுதியை டாடா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை உருவாக்கி அதற்கு வழங்கியது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வழியை பின்பற்றி தான் தற்போது நாங்கள் லோதா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை நிறுவி இருக்கிறோம் என அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications