ISRO-க்கு செலவு செய்யுற ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.50 ரூபாய் திரும்ப அரசுக்கு கொடுக்கிறது..!!

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்காக நாம் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இஸ்ரோ மீண்டும் நமக்கு 2.50 ரூபாயாக திருப்பித் தருகிறது என்பது தெரிய வந்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரோ தலைவரான சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக அரசு சார்பாக மாணவர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு இடையிலான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சோம்நாத் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ISRO-க்கு செலவு செய்யுற ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.50 ரூபாய் திரும்ப அரசுக்கு கொடுக்கிறது..!!

அப்போது மற்ற நாடுகளின் விண்வெளி திட்டங்களோடு போட்டி போடுவது இல்லை இஸ்ரோவின் நோக்கம், நாட்டுக்காக சேவையாற்றுவதுதான் இஸ்ரோவின் பிரதான நோக்கம் என தெரிவித்தார். எனவே இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்துமே மக்களுக்கானவை என்றார்.

இஸ்ரோவின் பெரும்பாலான திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களாகவே இருக்கின்றன என குறிப்பிட்ட அவர், செயற்கைகோள்கள் மூலம் வானிலை அறிவிப்புகள் வெளியிடுவதை உதாரணமாக கூறினார்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்ட தகவல்களையும் அவர் குறிப்பிட்டார். விண்வெளி திட்டங்களை செயல்படுத்த ஒரு சுதந்திரம் தேவை அந்த சுதந்திரத்தை விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே எட்ட முடியும் என்றார்.

நிலவிற்கு சென்று ஆய்வு செய்வதற்கு நாம் மிகப்பெரிய தொகையை செலவிட்டாக வேண்டும். இதற்காக நாம் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. இந்த துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அவ்வாறு உருவாக்கும்போது திட்டங்களுக்கான நிதியை எளிதாக திரட்ட முடியும் எனக் கூறியுள்ளார்.

இஸ்ரோ தலைவராக உயர்ந்ததற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தன்னுடைய ஆசிரியர்களே தனக்கு மிகச்சிறந்த வழிகாட்டிகளாக இருந்தனர் என கூறினார். குறிப்பாக தன்னுடைய இயற்பியல் ஆசிரியர் ராஜப்பா மற்றும் கணக்கு ஆசிரியர் பால் ஆகிய இருவரும் தனக்கு மிகச்சிறந்த முறையில் பாடங்களை கற்பித்து தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பத்தாம் வகுப்பு ஆசிரியர் மறைந்த பாகிரதியம்மா தான் தனக்கு முதன் முதலில் ஐஐடி குறித்தும் நீ ஒரு நாள் மிகப்பெரிய பொறியாளராக உருவெடுப்பாய் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

1990களில் தன்னுடைய முதல் திட்டமான பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தொடக்கத்தில் தோல்வி அடைந்ததை குறிப்பிட்டு பேசிய சோம்நாத், இதற்கு அடுத்து பத்து மாதங்கள் தானும் தன்னுடைய குழுவினரும் கடுமையாக உழைத்ததாகவும், பின்னர் பிஎஸ்எல்வி ராக்கட்டை வெற்றிகரமாக ஏவியதாகும் அவர் தெரிவித்தார். இந்த தோல்வி தனக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்தது என்றும் பின்னாளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு இது காரணமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+