மொராக்கோவில் தொழிற்சாலை அமைக்கும் முதல் இந்திய நிறுவனம்.. அதுவும் டிபென்ஸ் துறையில்.. யார் தெரியுமா?

மொராக்கோ: முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன்படி டாடா குழுமத்துக்கு சொந்தமான Tata Advanced Systems Ltd (TASL) நிறுவனம் மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா பகுதியில் பாதுகாப்பு துறை உபகரணங்களை தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறது.

இதன் மூலம் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆலையை அமைக்க இருக்கிறது. இந்த ஆலையில் மொரோக்கோ ராணுவத்திற்கு தேவையான Wheeled Armoured Platforms எனப்படும் போர் வாகனங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.

மொராக்கோவில் தொழிற்சாலை அமைக்கும் முதல் இந்திய நிறுவனம்.. அதுவும் டிபென்ஸ் துறையில்.. யார் தெரியுமா?

மொராக்கோ பாதுகாப்பு படையினரை தொடர்ந்து டாடா நிறுவனம் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் வளர்ந்து வரக்கூடிய ஆப்பிரிக்கா பாதுகாப்புத்துறை சந்தையில் டாடா கால் பதித்துள்ளது.

அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாக வீரர்கள் பயணம் செய்து எதிரணியினரை தாக்கும் வசதிகள் கொண்ட ஒரு போர் வாகனமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஓராண்டுக்கு 100 போர் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும் என்றும் ஓராண்டுக்குள் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த போர் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன இவை லடாக் எல்லையில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் வாகனம் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தவை என தெரிவித்துள்ள டாடா நிறுவனத்தின் சுகாரன் சிங் இதன் மூலம் ஆப்பிரிக்க சந்தையில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பு டாடா நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போர் வாகனம் ஆப்பிரிக்க நாட்டு பாலைவனங்களில் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு உற்பத்திக்கான அனுமதி பெற்றது என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆலையில் சுமார் 350 பேர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என சொல்லப்படுகிறது .ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்தவரை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்து பெருமளவிலான பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை வாங்குகின்றன. இதற்கு முன்பு ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் இவற்றுக்கு பாதுகாப்பு துறைக்கான பொருட்களைவிற்பனை செய்து வந்தன. ஆனால் தற்போது சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.

இந்தியா தற்போது சொந்த நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்வதில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+