சென்னையில் இயங்கி வரக்கூடிய ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் வரலாற்றிலேயே முதன்முறையாக விளையாட்டு பிரிவில் 5 மாணவர்களுக்கு அட்மிஷன் தந்துள்ளது. மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான தனி மாணவர் சேர்க்கை பிரிவை ('Sports Excellence Admission' (SEA)) உருவாக்கி இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவிலேயே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கை பிரிவை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற பெருமை மெட்ராஸ் ஐஐடிக்கு கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் "விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர் சேர்க்கை" பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர் வீராங்கனைகளுக்கு ஐஐடியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த https://jeeadv.iitm.ac.in/sea/information.html பிரத்யேக இணையதளத்தில் மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரிவில் அட்மிஷன் பெறுவதற்கான தகுதி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் படி இந்தியாவை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு இளங்கலை பட்டப்படிப்பு பாடத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும். இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் அதே வேளையில் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியை தொடரவும் இந்த திட்டம் ஊக்குவிக்கிறது என மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை பிரிவை உருவாக்கியது "குழந்தைகள் விளையாட ஊக்குவிக்க வேண்டும்" என்ற செய்தியை அனைவருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.
இதன்படி 2024-25 ஆம் கல்வியாண்டில் மகாராஷ்டிராவை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை அரோகி பாவே, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வாட்டர் போலோ நீச்சல் வீரர் ஆரியமான் மண்டல், டெல்லியை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை நந்தினி ஜெயின், டெல்லியை சேர்ந்த டேபிள டென்னிஸ் வீரர் பிரபாவ் குப்தா, ஆந்திராவை சேர்ந்த டென்னிஸ் வீரர் வேதவச்சன் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐஐடியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தகுதி வாய்ந்த வீரர்களுக்கு இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு வழங்குவது சிறப்பானது என ஒரு பயனர் கூறியுள்ளார். ஒரு பயனர் இதன் மூலம் விளையாட்டும் முக்கியம் என்ற கருத்து அனைவரையும் சென்று சேரும் என ஒரு பயனர் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் ஒரு பயனர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் கல்வியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கானது அதில் விளையாட்டு பிரிவை அறிமுகம் செய்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கொண்டு வந்து வைப்பது சரியாக இருக்குமா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications