சென்னை: உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையான இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேறுவதாக அறிவித்து, தனது தொழிற்சாலை, உற்பத்தி கட்டமைப்பு, சப்ளை செயின் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறிய அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு 3 வருடங்களுக்கு பின்பு தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய உள்ளது.
இந்த நிலையில் சென்னை மறைமலைநகரில் அமைந்துள்ள மாபெரும் தொழிற்சாலையில் எந்த மாடல் கார்களை தயாரிப்பது என ஆலோசித்து வந்த நிலையில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

ஃபோர்டு நிர்வாகம் சென்னை தொழிற்சாலையை மீண்டும் இயக்கினாலும், இதில் தயாரிக்கப்படும் கார்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்காகத் தயாரிக்கப்படும். அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டங்களை ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஆராய்ந்து வருகிறதாம்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா Bloomberg TV-க்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் போர்டு என்ன தயாரிக்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
"கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரும் புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஏற்கனவே இருக்கும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் செய்யும் முதலீடுகள் பெரும்பாலானவை EV பிரிவைச் சார்ந்து இருக்கிறது," என்று TRB ராஜா கூறினார். உலக நாடுகள் அனைத்து சுற்றுச்சூழல்-க்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இந்த பிரிவில் தான் ஃபோர்டு நிர்வாகமும் தனது புதிய வாகனங்களைத் தயாரிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
ஃபோர்டு மோட்டார் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது. இப்போது, எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ந்து வரும் உலகளாவிய சந்தையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் மீண்டும் நுழைய முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications