இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் தமிழகத்தில் இன்றைய நிலையிலும் தாக்கம் பெரியளவில் குறையவில்லை எனலாம்.
இதற்கிடையில் தமிழகத்தினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன.
ஏற்கனவே நிசான், ஹூண்டாய், ராய்ல் என்பீல்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை நிறுத்தியுள்ளன.
ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் தற்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் தற்காலிகமாக, தனது சென்னையை ஆலையில் உற்பத்தியினை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா பரவல் காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்போதிலிருந்து நிறுத்தம்?
இந்த ஆலையில் சனிக்கிழமையிலிருந்து உற்பத்தியினை நிறுத்தலாம் என்று ஃபோர்டு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி
ஏற்கனவே தொழிலாளர்களின் கோரிக்கையின் படி ஆலை மே 14 முதல் மே 22 வரையில் ஆலை மூடப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனினும் தற்போது வரையிலும் நோயின் தாக்கம் இருந்து வரும் நிலையில், இது ஊழியர்களிடையே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
செலவுகளை ஏற்க வேண்டும்
சென்னை ஃபோர்டு ஊழியர்கள் சங்கம் 230 ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின், அனைத்து மருத்துவ செலவுகளையும் நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் தொழிற் சங்கம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
இதனால் மாநில அரசு கட்டுப்பாடுகளை நீக்கும் வரையில் ஆலையை மூடுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வைரஸினால் இழந்த ஊழியர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தொழிற்சங்கம் நிறுவனத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications