இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டவர்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
வெளி நாட்டவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது இந்திய பங்குச்சந்தை சரியும் என்பதும், மீண்டும் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது இந்திய பங்கு சந்தை ஏற்றம் காணும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டவர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டவர்களின் முதலீடு
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் இதனால் இந்திய பங்குச் சந்தை படிப்படியாக ஏற்றம் கண்டு வருவதாகவும் வருங்காலத்தில் இன்னும் அதிக அளவில் வெளிநாட்டவர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
5000 கோடி
கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த தொகையின் மதிப்பு வெறும் ரூ.5000 கோடி என்ற நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டவர்கள் வெளியேறி கொண்டே வந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் வரை வெளிநாட்டவர்கள் தங்களது முதலீட்டை ரூ.2.46 லட்சம் கோடி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூபாய் மதிப்பு
இதுகுறித்து இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ், யெஸ் செக்யூரிட்டீஸ் முன்னணி ஆய்வாளர் ஹிதேஷ் ஜெயின் கூறியபோது, 'ஆகஸ்ட் மாதத்தில் எஃப்.பி.ஐ நிலை நேர்மறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரூபாயின் மோசமான மதிப்பு முடிந்துவிட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு வரம்பில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே உறுதியான வருவாய் வளர்ச்சி காரணமாக வெளிநாட்டவர் முதலீடு வலுவாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
டாலர் குறியீடு
வெளிநாட்டவர்களின் முதலீடு குறித்த தரவுகளின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் எஃப்.பி.ஐ.க்கள் இந்திய பங்குகளில் ரூ.14,175 கோடியை செலுத்தியுள்ளனர். FPI உத்தியில் ஏற்பட்ட மாற்றம் சமீபத்திய சந்தை ஏற்றத்திற்கு பலத்தை அளித்துள்ளது. கடந்த மாதம் 109க்கு மேல் இருந்த டாலர் குறியீடு இப்போது 106க்கு கீழே சரிந்ததற்கும் எஃப்பிஐ வரத்துக்கான முக்கிய காரணம். இந்த போக்கு தொடரலாம்" என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறினார்.
பங்குச்சந்தை நிபுணர்கள்
எனவே இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக இருந்த சரிவு காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றும் இனி இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்றும் அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவதால் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் காணலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications