ஜப்பானில் நிறைவேறிய கனவு.. கூகுள் வேலையை உதறிவிட்டு ரோபோட்டிக்ஸ் ஸ்டார்ட் அப் தொடங்கிய இந்தியர்..!!

உலகிலேயே பெரிய டெக் கம்பெனியான கூகுளில் சுமார் 10 ஆண்டுகள் வேலை பார்த்த ஒரு பெரிய இன்ஜினியர், தனது வேலையை விட்டுவிட்டு, ஜப்பானில் புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கியுள்ளார். அவர் பெயர் ஜாட் தாரிஃபி. இவர், இப்போது 'இன்டெக்ரல் AI' என்ற ரோபோக்களை உருவாக்கும் ஒரு புதிய கம்பெனியின் முதலாளியாக இருக்கிறார்.

AI படிப்பில் நிபுணர் : ஜாட் தாரிஃபி கடந்த 2012-இல் அமெரிக்காவில் AI குறித்த படிப்பை முடித்துவிட்டு, கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் அங்கு வேலை செய்த 10 ஆண்டுகளில், AI உலகில் ஏற்பட்ட பெரிய பெரிய மாற்றங்களை எல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். ஒரு தலைவராக எப்படிச் செயல்பட வேண்டும், கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை எப்படி உற்சாகப்படுத்த வேண்டும், பயப்படாமல் புதிய யோசனைகளை சொல்ல எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் கூகுளில்தான் அவர் கற்றுக் கொண்டதாக சொல்கிறார்.

ஜப்பானில் நிறைவேறிய கனவு.. கூகுள் வேலையை உதறிவிட்டு ரோபோட்டிக்ஸ் ஸ்டார்ட் அப் தொடங்கிய இந்தியர்..!!

ஆனால், அவர் மனதில் ஒரு கனவு இருந்தது: அது, சாதாரண மக்களுக்குப் பயன்படும், ரோபோக்கள் மூலம் இயங்கும் ஒரு தனிப்பட்ட AI-ஐ உருவாக்க வேண்டும் என்பதுதான். "கூகுளின் முக்கிய வேலை பணம் சம்பாதிப்பதுதான். ஆனால், நான் நினைக்கிற மாதிரி ரோபோக்கள் மூலம் வேலை செய்யும் ஒரு தனிப்பட்ட AI-ஐ அங்கே உருவாக்கினால், அது விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் அவர்களின் திட்டத்துக்கு பொருந்தாமல் போகலாம்" என்று அவர் உணர்ந்தார்.

ஏன் ஜப்பானை தேர்வு செய்தார்..?: கடந்த 2020-இல், கூகுளில் தனது கடைசி வருடத்தில் இருந்தபோது, தாரிஃபி எப்படியோ தன் மேலாளரிடம் பேசி டோக்கியோவுக்கு (ஜப்பான்) மாற்றலாகி சென்றார். இந்த முடிவே அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. அமெரிக்கா AI தொழில்நுட்பத்தில் கெட்டிக்காரனாக இருந்தாலும், ரோபோக்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தியில் கொஞ்சம் பின்னால் இருந்தது. ஆனால், ஜப்பான் தான் உலகிலேயே பெரிய ரோபோக்களை உருவாக்கும் மையம் ஆகும்.

"ஜப்பானுக்குப் போனதால், சிலிக்கான் வேலியில் நான் கற்ற சிறந்த AI அறிவையும், டோக்கியோவில் உள்ள சிறந்த ரோபோக்கள் பற்றிய அறிவையும் என்னால் ஒன்றாக இணைக்க முடிந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ள தொழிற்சாலைகள் மற்றும் ரோபோக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுடன் பேசியபோது, நிஜ வாழ்க்கைக்கு ஏற்ற தயாரிப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிந்துகொண்டார். அந்த ஒரு வருடத்தில், கஷ்டப்பட்டு பேசிப் பழகி, ஜப்பானிய மொழியையும் அவர் கற்றுக் கொண்டார்.

2021-இல் கூகுளை விட்டு விலகிய தாரிஃபி, ரோபோக்கள் மற்றும் தானாக ஓடும் கார்களை கட்டுப்படுத்தும் AI அமைப்புகளை உருவாக்கும் தன் கம்பெனியை ஜப்பானில் தொடங்கினார். ஜப்பானில் தொழில் தொடங்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அங்கே பழைய அலுவலக விதிகள், காகித வேலைகள் என சில சிக்கல்கள் உள்ளன. ஒரு கம்பெனிக்கு வங்கிக் கணக்கு திறக்கவே 3 மாதங்கள் ஆனதாக அவர் சொல்கிறார்.

இருந்தாலும், உலகின் சிறந்த ரோபோட்டிக்ஸ் சந்தையை அணுகுவதற்காக இந்த கஷ்டங்களை அவர் தாங்கிக் கொண்டார். அமெரிக்காவில், "வேகமாக ஓடு, விதிகளை உடை" என்று சொல்லிப் புதுமை செய்வார்கள். ஆனால், ஜப்பானில் "எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து, படிப் படியாக செய்" என்று கற்றுக்கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

உங்கள் வேலையில் மிகப் பெரிய உச்சத்தை அடைய விரும்பினால், சிலிக்கான் வேலி தான் சிறந்த இடம். ஆனால், வேலை-வாழ்க்கை இரண்டையும் சமமாக வைத்துக்கொண்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் வேலை பார்க்க விரும்பினால், நீங்கள் நினைத்த எல்லாமே கிடைக்கும் ஒரு அரிய இடமாக ஜப்பான் உள்ளது என்று அவர் இளைஞர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+