ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயரை அறிவித்துள்ளார். "Parallel Web Systems" என்ற இந்தப் பெயர் இதுவரை அறியப்படாமல் இருந்த நிலையில் தனது லிங்க்டின்-இல் நிறுவனத்தின் பெயரை சேர்த்துள்ளார். பாராக் அகர்வால் எப்போது தனது லிங்க்டின் ப்ரொபைலில் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயரை சேர்த்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு முதல் இவர் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான முயற்சியில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
The Information-இன் ஜனவரி மாத அறிக்கையின்படி, அக்ரவால் நிறுவனத்திற்கு சுமார் $30 மில்லியன் நிதி திரட்டியுள்ளார். நிறுவனத்தின் மூலதன செயல்பாட்டிற்கு ஆதரவளித்தவர்களில் கோஸ்லா வென்ச்சர்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ரவுண்ட் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் அடங்கும்

நிறுவனத்தின் லிங்க்டின் பக்கத்தில், 10 பேர் பணியாற்றுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்திற்கான API-ஐ வெப் டேட்டாவைப் பயன்படுத்தி உருவாக்க உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. Parallel Web Systems இணையதளம் வேறு எந்த விவரங்களையும் கொண்டிருக்கவில்லை.
நிறுவனம் கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் அமைந்துள்ளது. இருப்பினும், சேவை பிரிவு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு முகவரியை பட்டியலிடுகிறது. இது ட்விட்டரின் முன்னாள் அலுவலகமான X-க்கு சிறிய தூரத்தில் உள்ளது. நிறுவன தாக்கல் ஆவணங்கள், அக்ரவால் ஒரு நிறுவன அதிகாரியாக இருக்கும் Shapley Inc. என்ற நிறுவனத்தின் அதே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அக்ரவால் எப்போது இணையதள டொமைனை பதிவு செய்தார் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ட்விட்டர் முதல் AI வரை: அக்ரவால் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நவம்பர் 2021-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2022-ஆம் ஆண்டு வரை இருந்தார். அப்போது எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை பணியிலிருந்து நீக்கினார்.
கர்ட் வாக்னரின் "பேட்டில் ஃபார் தி பேர்ட்" புத்தகத்தின்படி, ட்விட்டரை வாங்குவதற்கு மஸ்க் $44 பில்லியன் கொடுத்து ஒப்பந்தத்தை முடித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு முன், அவரது தனியார் ஜெட் தொடர்பான ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்று அக்ரவாலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்ரவால் இந்த கோரிக்கையை மறுத்தார். இதையடுத்து, மஸ்க் ட்விட்டரின் பங்குகளை வாங்கத் தொடங்கினார். 9.2% பங்குகளை வாங்கி ஏப்ரல் 2022-க்குள் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரரானார் எலான் மஸ்க் .
அதன் பிறகு எலான் மஸ்க் அக்டோபர் 2022-ஆம் ஆண்டு ட்விட்டரை கையகப்படுத்தினார். பிறகு தனது முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிர்வாகியான விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் ஆகியோரை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்தார்
முன்னாள் ட்விட்டர் தலைவரும் மற்ற மூன்று முன்னாள் நிர்வாகிகளும் மார்ச் மாதம் மஸ்க்கிற்கு எதிராக $128 மில்லியன் சம்பளம் வழங்கவில்லை என்று மஸ்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது பராக் அகர்வால் தொடங்கி இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் எலான் மஸ்கின் நிறுவனங்களோடு போட்டியிடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications