இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏற்கனவே மூன்று நாள் நடந்து விட்ட நிலையில் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் நான்காவது நாள் முடிவில் ரூ.1,49,855 கோடி மதிப்புள்ள ஏலம் முடிவடைந்துள்ளது.
முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடியும் இரண்டாவது நாளில் சுமார் 4 ஆயிரம் கோடியும் மூன்றாவது நாளில் சுமார் 200 கோடி ஏலத்தொகை அரசுக்கு கிடைத்த நிலையில் 4வது நாளில் எவ்வளவு கிடைத்தது என்பதை பார்ப்போம்.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்தியாவின் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விற்பனை நான்காவது நாளான நேற்று வரை ரூ.1,49,855 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. நேற்றைய ரேடியோ அலைகளுக்கான ஏலத்தின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளன. இந்த நிலையில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 71 சதவீதம் தற்காலிகமாக விற்கப்பட்டுவிட்டதாக தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நேற்றைய ஏலம்
நேற்று மட்டும் நடந்த 7 சுற்றுகள் ஏலத்தில் மட்டும் ரூ.231.6 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது என்பதும், மொத்தம், இதுவரை 23 சுற்று ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஏலத்தொகையையும் சேர்த்து மொத்தம் இதுவரை ரூ.1,49,855 கோடி மதிப்புள்ள ஏலம் முடிவடைந்துள்ளது
4 நிறுவனங்கள்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் கெளதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் உள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் நாளையும் ஏலத்தில் கலந்து கொள்ள தயாராகியுள்ளன. 5ஜி ஸ்பெக்ட்ரம் முதல் நாளில் ரூ. 1.45 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு வட்டத்தில் 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டிற்கான தீவிர ஏலத்தில் ஈடுபட்டனர்.
ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பு
மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் (ஜிகாஹெர்ட்ஸ்) ரேடியோ அலைகள் குறைந்தபட்சம் ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ்), மிட் (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக அதிர்வெண் (26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைக்கு ஏலம் நடத்தப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications