இந்தியா குட்டி சீனாவாக மாறி வரும் வேளையில், ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் வேகமாக முன்னேறி வருகிறது. இதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில், தற்போது பல மாநிலங்கள் இப்பிரிவு வர்த்தகத்தின் ஆதிக்கத்தை பங்குப்போட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம், சமீப காலமாக தனது உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வேகமாக விரிவாக்கம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இத்தொழிற்சாலையில் வெறும் 8-9 மாதங்களில் சுமார் 30,000 ஊழியர்களை பணியமர்த்தி புதிய சாதனையை படைத்துள்ளது பாக்ஸ்கான். இது இந்தியாவில் இதுவரை எந்தொரு நிறுவனமும் செய்திடாத வகையில் வேகமான தொழிற்சாலை விரிவாக்கமாகும்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு அடுத்தாக இந்தியாவில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் வாயிலாக சென்னையில் இருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் வேளையில் தற்போது பெங்களூரில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்சாலையை சுமார் 20000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்து உற்பத்தி பணிகள் வேகமெடுக்க துவங்கியுள்ளது.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் 80 சதவீதம் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலும் 19-24 வயது இளைஞர்கள். இவர்களில் பலர் முதல் முறையாக வேலைக்கு செல்பவர்கள். பெண்கள் 80 சதவீதம் என்பதால் இது இந்தியாவின் ஒரே இடத்தில் அதிக பெண் ஊழியர்கள் கொண்ட தொழிற்சாலையாகவும் இத்தொழிற்சாலை உருவெடுக்கலாம்.
மேலும் தேவனஹள்ளி தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதன் நிர்வாகம் இலவச தங்குமிடம், குறைவான விலையில் உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சராசரியாக மாத சம்பளமாக ரூ.18,000 கொடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இத்தொழிற்சாலை ஏப்ரல்-மே மாதங்களில் சோதனை உற்பத்தியை தொடங்கி, ஐபோன் 16 மாடல்களை உற்பத்தி செய்தது, தற்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உற்பத்தி நடக்கிறது. இத்தொழிற்சாலையின் உற்பத்தியில் 80 சதவீதம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இத்தொழிற்சாலை முழு உற்பத்திதிறனை அடையும் போது 50,000 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 41,000 ஊழியர்கள் உள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கையை பெங்களூர் தொழிற்சாலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications