உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் சீனாவில் இருந்து பெரிய அளவிலான உற்பத்தி பணிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டுகளுக்கு கார்களை தயாரித்து வழங்கும் திட்டத்தை புதிதாக கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் அடுத்த வருடத்திற்குள் இந்தியாவில் அதன் மூதலீட்டையும், ஊழியர்கள் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்க திட்டமிட்டு உள்ளதாக பாக்ஸ்கான் குழுமத்தின் இந்திய பிரதிநிதியான வி லீ தனது லின்கிடுஇன் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு 73வது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த வி லீ, பாக்ஸ்கான் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையும், அன்னிய நேரடி முதலீடும், வர்த்தக அளவீட்டையும் இந்தியாவில் அடுத்த வருடத்திற்குள் இரட்டிப்பாக்க உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் வீ லீ இந்த முதலீடு எந்த மாநிலத்தில் வரும், எந்த துறையில் முதலீடு செய்யப்பட உள்ளது போன்ற முக்கியமான விஷயங்களை வெளியிடவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் பல மாநிலங்களில் தொழிற்சாலைகளை கட்டி வரும் பணிகளை செய்து வந்தாலும், முழுமையாக இயங்கி வருவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் மட்டுமே இதுவரையில் 40000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இத்தொழிற்சாலையில் ஐபோன் முதல் பல முன்னணி பிராண்டுகளுக்கு ஸ்மார்ட்போன் முதல் பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து வருகிறது.
பாக்ஸ்கான் தற்போது தமிழ்நாட்டில் அதன் தொழிற்சாலை பணிகளை விரிவாக்கம் செய்து வருவதோடு கர்நாடகா, தெலுங்கான, ஆந்திர மாநிலத்திலும் பல திட்டங்களுக்காக தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் அடுத்த முக்கியமான திட்டம் என்னவென்றால் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தான்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications