ஆப்பிள் ஐபோன்களை தொடர்ந்து Airpodகள் உற்பத்தியை தொடங்கியது ஃபாக்ஸ்கான்..

தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஐபோன்கள், ஏர்பாட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஏற்கனவே தன்னுடைய ஐபோன்கள் உற்பத்தி ஆலையை நிறுவி ஐபோன்களை உற்பத்தி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஹைதராபாத்தில் நிறுவியுள்ள தங்களுடைய ஆலையில் முதன்முறையாக ஆப்பிள் ஏர்பாட்களின் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரித்திருப்பதால் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் , ஐமேக் கணினிகள் ,ஏர்பாட்கள், ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்காமல் பெரும்பாலான உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன்களை தொடர்ந்து Airpodகள் உற்பத்தியை தொடங்கியது ஃபாக்ஸ்கான்..

ஏற்கனவே இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. இந்த உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி தங்கள் பிராண்டின் மற்ற சாதனங்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறது. இந்த சூழலில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஹைதராபாத் ஆலையில் ஆப்பிள் ஏர்பாட்களின் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் மையமாக இந்தியா படிப்படியாக மாறி வருகிறது. ஹைதராபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஏர்பாட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூருவில் மற்றொரு உற்பத்தி ஆலையையும் நிறுவி வருகிறது. இங்கே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு இந்த ஆலை உதவும் என்றும் தெரிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு 20 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்யக் கூடிய வகையில் பெங்களூரு உற்பத்தி ஆலை அமைக்கப்படுவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூறியிருக்கிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக பெங்களூரு ஆலை இருக்கும். இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கானுக்கு அடுத்தபடியாக ஐபோன்கள் தயாரித்து வழங்கும் நிறுவனமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் உருவெடுத்திருக்கிறது. ஓசூரில் இருக்கும் ஐபோன் ஆலையில் ஏற்கனவே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓசூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் கூடிய விரைவில் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக டாடா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய அமெரிக்க சந்தைக்கு தேவையான 60 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட 18 முதல் 20% ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை, 2025 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 25 முதல் 30 சதவீதமாக உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+