ஹைதராபாத்-க்கு ஜாக்பாட்.. பாக்ஸ்கான் புதிய தொழிற்சாலை.. எதுக்காக தெரியுமா..?

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனம், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் புதிய தொழிற்சாலையைக் கட்டி வருகிறது.

இந்த தொழிற்சாலையின் தொடக்கக் காலத்திலேயே சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதுடன், படிப்படியாக 1,00,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ஹைதராபாத்-க்கு ஜாக்பாட்.. பாக்ஸ்கான் புதிய தொழிற்சாலை.. எதுக்காக தெரியுமா..?

ஃபாக்ஸ்கான் நிறுவனம் நேரடியாகவும், அதன் கிளை நிறுவனங்கள் வாயிலாகவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என நாட்டின் பல நகரங்களில் தொழிற்சாலை அமைத்து ஆப்பிள் மற்றும் பல பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ஹைதரபாத் தொழிற்சாலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான "ஏர்போட்ஸ்" கருவி (AirPods) உற்பத்தி தொடங்கவுள்ளது. இது இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்காக மேற்கொள்ளும் முதல் ஆடியோ கருவி உற்பத்தியாகும்.

தெலுங்கானா மாநிலத்தின் முதலீட்டு ஊக்கம் மற்றும் NRI விவகாரங்கள் துறையின் சிறப்புச் செயலாளர் விஷ்ணு ரெட்டி அண்மையில் அளித்த பேட்டியில், ஹைதராபாத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பிரிவுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முழு ஆலையையும் வெறும் ஒன்றரை வருடங்களில் கட்டி முடித்துள்ளனர். இது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட கணிப்பான இரண்டரை வருடத்தைக் காட்டிலும் வேகமாகக் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

2023 மார்ச் மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு ஐதராபாத் நகரத்திற்கு நேரில் வந்து, தெலுங்கானா அரசுடனான ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து தொழிற்சாலை கட்டுமான பணிகள் துவங்கியது.

இதேவேளையில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தேவனஹள்ளி பகுதியில், Foxconn நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மே மாதம் போராட்டத்தில் குதித்தனர்.

தேவனஹள்ளி பகுதி விவசாயிகள் கூறுகையில், நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், வேளாண்மை நிலம் தங்களது வாழ்வாதாரம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மிகப்பெரிய அளவிலான உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் பாக்ஸ்கான், சமீபத்தில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்யத் தென்னிந்தியாவில் பல மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாபெரும் தொழிற்சாலையை சுமார் 300 ஏக்கர் நிலத்தில் அமைக்க முடிவு செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிப்பதற்கும், ட்ரோன்கள் தயாரிப்பதற்குமான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் கூகுள் சென்னையில் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்ஃபோன்களின் உற்பத்தி, பிக்சல் 8 மாடலுடன் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா (Google for India) மாநாட்டில் பிக்சல் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான திட்டங்களைக் கூகுள் முதன்முதலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+