தைவான் நாட்டின் பாக்ஸ்கான் சீனாவில் இருந்து உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு தொடர்ந்து மாற்றி வரும் வேளையில், தெலுங்கானா-வை தொடர்ந்து கர்நாடகாவில் சுமார் 967.91 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இப்புதிய முதலீட்டின் வாயிலாக கர்நாடகா மாநிலத்தில் 50000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பாக்ஸ்கான் தரப்பில் இருந்து இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான்
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய கூட்டணி நிறுவனமாக உள்ளது. பாக்ஸ்கான் இல்லையெனில் ஆப்பிள் இல்லையென்ற நிலை தான், இந்த நிலையில் அமெரிக்கா - சீனா வர்த்தக போர் காலத்தில் சீனாவில் இருந்து ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்தது.
ஆப்பிள் - பாக்ஸ்கான் கூட்டணி
இந்த முடிவின் படி ஆப்பிள் - பாக்ஸ்கான் கூட்டணி மட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான உற்பத்தி கூட்டணி நிறுவனங்களும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அமெரிக்கா - சீனா வர்த்தக போருக்கு முன்பே சென்னை தொழிற்தசாலை மூலம் சியோமி உட்பட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வந்தது.
ஆப்பிள் ஏர்பாட்
சமீபத்தில் பாக்ஸ்கான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கைப்பற்றியது. இதற்காக தனி தொழிற்சாலவையை அமைக்க முடிவு செய்து இடத்தை தேடி வந்தது. இதற்கிடையில் தான் பாக்ஸ்தான் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாக குழு இந்தியாவுக்கு வந்தது.
300 ஏக்கர்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry ஐபோன் உதிரிபாகங்களுக்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியானது.
பெங்களூர் தொழிற்சாலை
பாக்ஸ்கான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் இந்திய பயணத்தில் இந்த பெங்களூர் தொழிற்சாலைக்காக 700 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியானது. இந்த மாபெரும் திட்டம் உறுதியாகும் பட்சத்தில் இதுதான் அதிகப்படியான சிங்கிள் இன்வெஸ்ட்மெனட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி
பாக்ஸ்கான் ஆப்பிள், சியோமி போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து கொடுக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. பாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சந்தைக்குள் வருவது என்பது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவது மட்டும் அல்லாமல் போதுமான கார்களை தயாரிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications