சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஐபோன் மற்றும் அதன் பாகங்களின் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் சீனாவை தான் சார்ந்திருந்தது. ஆனால் அடிக்கடி சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்படும் மோதல்கள் ஐபோன் உற்பத்தி மற்றும் இறக்குமதியில் பிரச்சினையை ஏற்படுத்தியது.
ஐபோன் உற்பத்தி மையம் இந்தியா: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் பிற சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவிற்கு படிப்படியாக மாற்றி வருகிறது. இந்தியா ஆப்பிள் நிறுவன சாதனங்களின் பிரதான உற்பத்தி மையமாக மாறும் என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றன.

ஃபாக்ஸ்கான் நிறுவனம்: டாடா நிறுவனம் ஓசூரிலும் ஃபாக்ஸ் கான் நிறுவனம் சென்னையிலும் ஆலை அமைத்துள்ளன. இதில் ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் ஒருங்கிணைப்பு ஆலையை செயல்படுத்தி வருகிறது. அதாவது பாகங்களை கொண்டு வந்து போனாக ஒருங்கிணைந்து ஏற்றுமதி செய்கிறது. டாடா நிறுவனம் ஐபோன்களுக்கான enclosure எனப்படும் உறைகளை தயாரித்து வழங்குகிறது. இந்த சூழலில் ஃபாக்ஸ் கான் நிறுவனம் மேலும் ஒரு ஐபோன் ஆலையை அமைக்க இருக்கிறதாம்.
ஓரகடத்தில் புதிய ஆலை: சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அல்லாமல் வேறு ஒரு பகுதியில் ஃபாக்ஸ்கான் ஐபோன் ஆலையை அமைக்க இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. சென்னை ஒரகடம் ஈஎஸ்ஆர் தொழில் பூங்காவில் இந்த புதிய ஐபோன் ஆலையை ஃபாக்ஸ்கான் அமைக்க இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் ஒருங்கிணைப்பு பணி நடக்கும் நிலையில் ஓரகடம் ஆலையில் ஐபோன் உறைகளை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறது.
சென்னையில் 2 ஆலைகள்: ஃபாக்ஸ்கான் சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் உற்பத்தி ஆலை அமைத்துள்ளது. ஐதராபாத் ஆலையில் ஐபாட் உற்பத்தி செய்கிறது. பெங்களூருவில் மிகப்பெரிய ஆலையை அமைத்து வருகிறது. ஐபோன் ஒருங்கிணைப்பு இல்லாமல் பாகங்கள் உற்பத்தியிலும் ஃபாக்ஸ்கான் களமிறங்குகிறது அதற்கு சென்னையை தேர்வு செய்துள்ளது.
ஓரகடத்தில் 2 ஆலைகள்: ஓரகடம் தொழில்பூங்காவில் ஐபோன் ஆலைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய டிஸ்ப்ளே மாட்யூல் ஒருங்கிணைப்பு ஆலையையும் இதே தொழில் பூங்காவில் நிறுவி வருகிறது. அந்த வகையில் ஓரகடம் ஆலையில் ஃபாக்ஸ்கான் இரண்டு ஆலைகளை செயல்படுத்த இருக்கிறது.
ரூ. 12,800 கோடி முதலீடு: ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்கும் போக்கை இந்தியாவில் செயல்படக்கூடிய தன்னுடைய ஐபோன் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருகிறது. ஃபாக்ஸ் கான் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 12,800 கோடி முதலீடு செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் ஐபோன் பாகங்களை உற்பத்தியை விரிவாக்கம் செய்வது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications