சென்னை: ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தங்களுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஆலை இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதான ஆலை ஆகும். கடந்த ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டது. அதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தங்களுடைய ஆலையில் திருமணம் முடித்த பெண்களுக்கு பணி வழங்க மறுப்பதாக தெரிவித்திருந்தது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு கொள்கை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இந்தியாவில் தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து வழங்கும் நிறுவனங்களுக்கு ஃபாக்ஸ் கான் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாம். ஐபோன் பாகங்களை ஒருங்கிணைக்கும் தங்களின் ஆலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரங்களில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இடம்பெறக்கூடாது என கூறியுள்ளதாம்.
முகவர்கள் ஃபாக்ஸ்கான் நிறுவன வேலைக்கான விளம்பரங்களில் தேவைப்படும் வேலையாட்களின் வயது பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றை குறிப்பிடக் கூடாதாம். குறிப்பாக ஃபாக்ஸ்கான் என்ற பெயரை விளம்பரத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 25ஆம் தேதி ராய்ட்டர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் ஒரு ஆய்வினை நடத்தி திருமணமான பெண்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கூறியது.

இது ஃபாக்ஸ்கான் ஆலைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்தது. இந்த நிலையில் ஃபாக்ஸ்தான் நிறுவனம் தங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய முகவர்களுக்கு கடுமையான வழிமுறைகளை அனுப்பியுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருக்கிறதாம். அது மட்டும் இன்றி திருமணமாகாதவர்களுக்கு மட்டுமே வேலை, குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே வேலை, ஆண் அல்லது பெண்களுக்கு மட்டுமே வேலை என்பன உள்ளிட்ட வார்த்தைகள் விளம்பரத்தில் இடம்பெறக் கூடாது என இந்த முகவர்களுக்கு வாய் மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வழங்கும் சில முகவர்களின் விளம்பரங்களை ஆய்வு செய்துள்ளது. அதில் " ஏசி பணியிடம், இலவச போக்குவரத்து வசதி, கேண்டீன் வசதி, இலவச தங்குமிடம், மாத சம்பளம் 14 , 974 ரூபாய் " என மட்டுமே விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.
தன்னுடைய பெயரும், தங்களின் கிளைண்ட்டான ஆப்பிள் நிறுவனத்தின் பெயரும் களங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஃபாக்ஸ் கான் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications