இந்தியா உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப் ஆக மாற வேண்டும் என்ற திட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கும் வேளையில், ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் வேகப்படுத்த ஆப்பிள் மற்றும் அதன் சக உற்பத்தி கூட்டணி நிறுவனங்களும் தீவிரமாக உள்ளது.
அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரின் காரணமாக சீனாவில் இருந்து படிப்படியாக பெரும் பகுதி உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியுள்ள ஆப்பிள்-க்கு உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிப்பதில் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.
ஐபோனுக்கான உதிரிபாகங்களை செய்ய டாடா குழுமத்திடம் ஆப்பிள் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் இருக்கும் ஐபோன் அசம்பிள் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் டாடா தொழிற்தசாலையில் தயாரிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ்கான் பெங்களூரில் சுமார் 300 ஏக்கரில் புதிய தொழிற்சாலையை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry ஐபோன் உதிரிபாகங்களுக்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர்
இந்த இடத்தில் பாக்ஸ்கான் பல பிரிவுகளுக்காக பயன்படுத்த உள்ளது, முக்கியமாக ஐபோன் உதிரிபாகங்களுக்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டாலும் ஐபோன் அசம்பிளி தளம் அமைக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதேபோல் பாக்ஸ்கான் இந்த 300 ஏக்கரில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும் தயாரிக்க திட்டமும், ஆலோசனை செய்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
700 மில்லியன் டாலர்
மேலும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பயணத்தில் இந்த பெங்களூர் தொழிற்சாலைக்காக 700 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாபெரும் திட்டம் உறுதியாகும் பட்சத்தில் இதுதான் அதிகப்படியான சிங்கிள் இன்வெஸ்ட்மெனட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம்
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தமானது தெலுங்கானவின் பிரகதி பவனில் மார்ச் 2 அன்று தெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் பாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முன்னிலையில் Hon Hai Technology Group மற்றும் தெலுங்கானா அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த ஒப்பந்தம் மூலம் தெலுங்கானாவில் 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது. பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைக்க எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications