சென்னை: தமிழ்நாட்டில் ஆலை அமைத்து ஐபோன்களை தயாரித்து வரக்கூடிய ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான இனோகானையும் (Ennoconn) தமிழ்நாட்டில் நிறுவ இருப்பது தெரியவந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை அருகே தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலையில் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான இனோகான் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தன்னுடைய நிறுவனத்தை அமைக்க இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் அமைவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இனோகான் கார்ப்பரேஷன் நிறுவனம் சர்வதேச அளவில் இன்டர்கிரேடட் கிளவுட் மேனேஜ்மென்ட் சேவைகளில் சிறந்த நிறுவனமாக இயங்கி வருகிறது. 2007 ஆம் ஆண்டு தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு தேவையான industrial IoT மற்றும் embedded technology, design manufacturing services, IT மற்றும் பிற சேவைகளை வழங்கி வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் மனுஃபேக்ச்சரிங், ஸ்மார்ட் ரீடைல், பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகிய பிரிவுகளில் இனோகான் நிறுவனம் இந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் தற்போது இந்த பிரிவில் சைமென்ஸ் (Siemens) மற்றும் அட்வான்டெக் & ராக் வெல் ஆட்டோமேஷன் (Advantech and Rockwell Automation) ஆகிய நிறுவனங்கள் தான் பெருமளவில் தொழில் செய்கின்றன. இந்த நிலையில் தான் இனோகான் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் கால் பதித்து இந்த துறையை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தி வருவதால், அதை பயன்படுத்திக்கொண்டு இனோகான் இந்தியாவில் ஆலைகளை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிஎல்ஐ. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதியுதவி திட்டம் இது. இந்த திட்டத்தின் மூலம் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.4 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருப்பதாக தெரிகிறது. அடுத்த ஓராண்டுக்குள் இது 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎல்ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் 12.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி நடைபெற்று இருப்பதாகவும் சுமார் 9.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications