தெலுங்கானா மாநிலத்தில் தைவான் நாட்டை தலைமையகமாக கொண்ட பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளது. அதன்மூலம் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் உற்பத்தி துறையாக மாறி வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறையில் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துக்கிடக்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
இதன் அடிப்படையில் தான் பாக்ஸ்கான் தெலுங்கானாவில் அமைக்கும் மாபெரும் தொழிற்சாலை.
தெலுங்கானாவில் பாக்ஸ்கான்!
பன்னாட்டு நிறுவனமாக பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்களுடன் வியாழக்கிழமை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு உறுதிபடுத்தியுள்ளது.
பிரகதி பவனில் ஒப்பந்தம்!
இந்த தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தமானது தெலுங்கானவின் பிரகதி பவனில் மார்ச் 2 அன்று தெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் பாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முன்னிலையில் Hon Hai Technology Group மற்றும் தெலுங்கானா அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
இந்த ஒப்பந்தம் மூலம் தெலுங்கானாவில் 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைக்க எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதலமைச்சர் நம்பிக்கை!
இந்த ஒப்பந்தம் குறித்து தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கூறுகையில், தைவானுடன் தெலுங்கானாவிற்கு இயற்கையாகவே உறவு இருப்பதுபோல உணர்வதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மற்றும் பாக்ஸ்கானின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
மேலும் இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசு ஆற்ற வேண்டிய முக்கிய கடமைகள் குறித்தும் முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
வேலைவாய்ப்பு
மேலும் இந்த தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
பாக்ஸ்கான் தலைவர் பெருமிதம்!
மேலும் பாக்ஸ்கான் தலைவர் வெறும் 8 ஆண்டுகள் தெலுங்கான தொழில் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில் குறுகிய காலகட்டத்தில் மாநிலம் பெரிய வளர்ச்சியைடைந்து குறித்து பாரட்டியுள்ளார். மேலும் இம்மாநிலத்தில் அவர்கள் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் யங் லியு கூறியுள்ளார்.
பாக்ஸ்கான் (Foxconn)
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தைவான் நாட்டின், நியூ தைபே சிட்டியை தலைமையகமாகக் கொண்ட Hon Hai Precision Industry Co Ltd குழுமத்தின் பன்னாட்டு மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர் நிறுவனமாகும். இந்நிறுவனம் தைவானில் 1974 இல் நிறுவப்பட்டது. இக்குழுமம் சீனா, தைவான் போன்ற சர்வதேச அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications