மோடி அரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Foxconn.. யாரு பெருசுன்னு அடிச்சிக்காட்டு..!!

செமிகண்டக்டர் போர் அமெரிக்கா - சீனாவுக்கு மத்தியில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், இத்துறையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதை பணமாக்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கிறது அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம். ஆனால் இதற்கு முன்பே வேதாந்தா - பாக்ஸ்கான், Tower Semiconductor, Next Orbit ஆகியவற்றின் திட்டமும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இதில் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி கடுமையாக மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற முயற்சி செய்த நிலையில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த காரணத்தாலும், கருத்து வேறுபாடு, முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தாலும் கூட்டணி உடைந்தது.

மோடி அரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Foxconn.. யாரு பெருசுன்னு அடிச்சிக்காட்டு..!!

தற்போது வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் தனித்தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கும் முடிவில் இறங்கியது. குறிப்பாக பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசிடம் வரைவில் தனித்து செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக விண்ணப்பம் கொடுக்க உள்ளதாக அறிவித்தது.

பாக்ஸ்கான் அறிக்கை வெளியிட்ட சூட்டோடு, இன்று மத்திய அரசிடம் பாக்ஸ்கான் இந்தியாவில் குறைந்தது 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூட்டணி இல்லாத காரணத்தால் முதலீடும், உற்பத்தி அளவும் குறையும் என எதிர்பார்த்த நிலையில் 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்கும் முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

மேலும் மத்திய அரசிடம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி தளத்தை அமைக்க குறைந்தது 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும், இது தொழில்நுட்ப உதவிக்கானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இதை ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு செய்த பின்பு, உரிய தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கான உதவிகளை பெற்ற பின்பு முழுமையான பங்கீடு ஒப்பந்தத்துடன் முறையாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் சமர்ப்பித்து அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ்கான் அமைக்க திட்டமிட்டு உள்ள 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களில் குறைந்தது 1 குஜராத்தில் அமைக்கப்படும். மற்ற 3 நாட்டின் வேறு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது, இதற்காக நிலம் தேடும் பணிகளில் பாக்ஸ்கான் இறங்க உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் யார் முதலில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தியை துவங்குகிறார்கள் என்பதில் பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா மத்தியில் போட்டி உருவாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+