செப்டம்பர் மாதத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தரவுகளும், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகளும், குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியச் சந்தையின் மீதான நம்பிக்கை அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கச் சந்தையில் இருந்து அதிகமான முதலீடு குவியவும், இந்திய டெக் துறையில் இக்காலகட்டத்தில் அதிகளவில் முதலீடு குவிய முக்கியக் காரணமாக அமைந்திருப்பது அமெரிக்கத் தேர்தல் ஜோ பிடன் வெற்றி தான்.
இந்நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியச் சந்தையில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 62,951 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியப் பங்குச்சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 60,538 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தேசியப் பாதுகாப்பு வைப்பகம் தரவுகளின் படி இந்த நவம்பர் மாத 60358 கோடி
ரூபாய் முதலீடு தான் வரலாற்று உச்சமாக உள்ளது.
நவம்பர் 3 முதல் நவம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 62,951 கோடி ரூபாய் அளவிலான தொகையை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதில் 60,358 கோடி ரூபாய் தொகையைப் பங்குச்சந்தையிலும், 2,593 கோடி ரூபாய் பங்குகளைக் கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் தற்போது வல்லரசு நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் உலகில் அனைத்து நாடுகளும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில் வளரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.
இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தை முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் நவம்பர் மாதத்தில் சுமார் 62,951 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதேபோலே அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தாண்டி அதிகளவில் தைவான் மற்றும் தென் கொரியா நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.