இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவை சந்தை செப்டம்பர் மாதம் முதல் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்து வரும் அதேவேளையில் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு -10 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து 2 காலாண்டுகளாகச் சரிவு பாதையில் இருப்பதால் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் இருந்தாலும், இரு காலாண்டில் 50 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது பொருளாதாரம். இதோடு அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி இந்தியாவிற்குப் பல சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 49,553 கோடி ரூபாய் தொகையை அன்னிய முதலீட்டாளர்கள் செய்துள்ளனர்.
நவம்பர் மாதம்
நவம்பர் மாதத்தில் 3 வாரங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் FPI எனப்படும் Foreign portfolio investors சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்த மந்தமாகவும், நிலையற்ற தன்மையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்திய சந்தை மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து சுமார் 49,553 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர்.
முதலீடு
நவம்பர் 3 முதல் 20ஆம் தேதி வரையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் செய்த 49,553 கோடி ரூபாய் முதலீட்டில் 44,378 கோடி ரூபாய் அளவிலான தொகை நேரடியாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள 5,175 கோடி ரூபாய் தொகையைக் கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
ஆபத்தான கட்டத்தில் நிலையான லாபம் வருவதற்காக மட்டுமே அன்னிய முதலீட்டாளர்கள் வெளிநாட்டுக் கடன் சந்தையில் முதலீடு செய்வார்கள். இந்நிலையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் 89 சதவீத முதலீடு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சாத்தியக்கூறுகள் வெளிப்படுகிறது.
அக்டோபர் மாதம்
இதே அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதம் முழுவதும் இந்திய சந்தையில் வெறும் 22,033 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா மற்றும் தைவான்
இதே காலகட்டத்தில் இந்திய சந்தையைப் போல் தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் அதிகளவிலான முதலீட்டை குவிந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதமும் சிறப்பான அன்னிய முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications