சுத்தி அடிவாங்கும் டிக்டாக் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் பெரிய அடி வாங்கியுள்ளது, ஆனால் உலகின் பிற நாடுகளுக்கு ஒரு படிக்கு மேலே சென்று பல முன்னணி செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்வதை கண்டு மகிழ்ச்சி அடைவதை காட்டிலும் நாளுக்கு பல பிரச்சனைகள் உருவாக்கி வருகிறது. ஒருபக்கம் டிஜிட்டல் வங்கி சேவை கீழ் பணத்தை மோசடியாளர்கள் டிசைன் டிசைனாக திருடி வரும் வேளையில், மறுபுறம் டிஜிட்டல் சேவை செயலிகள் மூலம் தனிநபர் திருட்டு அதிகளவில் நடக்கிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசு உலகின் முன்னணி செயலிகளுக்கு மிகப்பெரிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
தகவல் பாதுகாப்பு
டிஜிட்டல் உலகில் தகவல் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக சீன செயலிகளை பற்றி கேட்கவே வேண்டியது இல்லை. உலகின் பல நாடுகள் சீனாவின் டிக்டாக் செயலிகளை தடை செய்து வரும் வேளையில் இந்த பட்டியலில் பிரான்ஸ் நாடும் இணைந்துள்ளது.
டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி அந்நாட்டு அரசு அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான மற்றும் அரசுக்கு தொடர்பான கருவிகளில் டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற பொழுதுபோக்கு செயலிகளை தடை செய்வதாக பிரான்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
டிக்டாக் செயலி
பிரபலமான வீடியோ பகிர்வு செயலியும், சீன அரசுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டிக்டாக் செயலிக்கு உலகின் பல நாடுகள் முழுமையாக தடை விதித்தும், அமெரிக்கா போன்ற சில முன்னணி வல்லரசு நாடுகள் அரசு அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான மற்றும் அரசுக்கு தொடர்பான கருவிகளில் மட்டும் டிக்டாக்-ஐ தடை செய்து வருகிறது. தற்போது பிரான்ஸ் நாடும் இதை பின்பற்றுகிறது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
டிக்டாக் செயலி என்றால் புரிந்துக்கொள்ள முடிகிறது, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற பொழுதுபோக்கு செயலிகளை தடை செய்வதாக பிரான்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்ததுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. டிவிட்டர் போன்ற தளங்களை அரசு அதிகாரிகள் முதல் அந்நாட்டின் அதிபர் Emmanuel Macron வரையில் அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் இந்த கட்டுப்பாடு பெரும் அதிர்ச்சியை டெக் நிறுவனங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சைபர்செக்யூரிட்டி ஏஜென்சி
மேலும் இந்த தடை உத்தரவுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் சைபர்செக்யூரிட்டி ஏஜென்சி இதை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications