ஒரே நிறுவனம் 4000 கார்களுக்கு ஆர்டர்.. Citroenக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா..!!

இந்தியாவில் வேகமாக வளரும் மின்சார கார்கள் சந்தை- பிரெஞ்சு நிறுவனத்துடன் களமிறங்கும் ப்ளூஸ்மார்ட்..

பெங்களூரு: பிரேஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரான், இந்தியாவில் மின்சார கார்களை மட்டுமே இயக்கும் பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒரே நிறுவனம் 4000 கார்களுக்கு ஆர்டர்.. Citroenக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா..!!

முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா முதலீட்டில் இயங்கிவரும் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் ஓலா, உபர்-க்கு போட்டியாக விளங்கி வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன இயக்கத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கிறது, இதன் மூலம் டாக்சி சேவை பிரிவில் எலக்ட்ரிக் கார்கள் புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரான் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியாவில் அதன் மின்சார வாகன சந்தையில் விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ப்ளூஸ்மார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் மூலம் 12 மாதங்களில் 4,000 சிட்ரான் e-C3 மின்சார கார்களை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் வாங்க உள்ளது. சிட்ரான் e-C3 மின்சார கார் சிட்ரானின் ICE C3 மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தொடர்ந்து, முதல் கட்டமாக ப்ளூஸ்மார்ட்டின் பெங்களூரு EV சார்ஜிங் சூப்பர்ஹப்பில் இருந்து 125 e-C3 கார்களின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. சிட்ரான் e-C3 மின்சார கார்கள் முழுமையான எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

இது 320 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் அடையும் வகையில் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதில் 29.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மாடல் ரூ. 12.47 லட்சத்திற்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மேலும் 7 ஆண்டுகள்/1.40 லட்சம் கிலோமீட்டர் பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது. ப்ளூஸ்மார்ட் நிறுவனம் இப்போது சுமார் 7,000 மின்சார கார்களை இயக்கி வருகிறது.

இந்தியாவின் மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதில் ப்ளூஸ்மார்ட் நிறுவனமும் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் 36 சார்ஜிங் சூப்பர்ஹப்களில் 4,400 மின்சார வாகன சார்ஜர்கள் உள்ளன.

கரியமில வாயு வெளியீட்டை பூஜ்யமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிட்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் வெற்றிகரமாக மின்சார வாகன அமைப்பை முழுமையாக கட்டமைப்பதே நோக்கம் என்றும் ப்ளூஸ்மார்ட் நிறுவன துணை நிறுவனர் அன்மோல் ஜக்கி தெரிவித்துள்ளார்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+