சொர்க்க பூமியாக மாறும் கோயம்புத்தூர்.. இந்தியால அதிக வேலை வாய்ப்பு இங்கதா.!!

Naukri என்பது ஒரு புகழ்பெற்ற வேலைவாய்ப்பு இணையதளம் ஆகும். இந்நிறுவனத்தின் ஜூன் மாத அறிக்கையின்படி, இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 11% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கணக்குப்பிரிவு (Accounting), காப்பீட்டு துறை (Insurance Sector) மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (AI/ML) துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது இளம் தொழில்நுட்பவியலாளர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும் நௌக்ரி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் தெரிவித்துள்ளார்.

சொர்க்க பூமியாக மாறும் கோயம்புத்தூர்.. இந்தியால அதிக வேலை வாய்ப்பு இங்கதா.!!

நௌக்ரி நிறுவனத்தின் அறிக்கையின்படி, முன்னணி இந்திய நகரங்களில் கோயம்புத்தூர், புதிய வேலைவாய்ப்பு ஆட்கள் (freshers) ஆட்சேர்ப்பில் முக்கிய மையமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், கோவையில் 24% வரை புதிய வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சமீப காலமாகவே தகவல் தொழில்நுட்ப (IT) துறையின் வேலைவாய்ப்பு மீண்டும் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்" என நௌக்ரி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (CBO) தெரிவித்துள்ளார்.

மேலும், காப்பீட்டு துறையில் (Insurance Sector) வேலைவாய்ப்பு கடந்த மாதத்தில் 32% அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஆட்சேர்ப்பு 59% வரை அதிகரித்துள்ளது. இது இளம் பட்டதாரிகள் மற்றும் முதன்முறையாக வேலை தேடுபவர்களுக்கு காப்பீட்டு துறையில் முக்கிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.

புனே, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக நௌக்ரி அறிக்கை கூறுகிறது. இதில் புனே நகரம் 32% வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து இந்திய நகரங்களிலும், ராய்ப்பூர் 22% வேலைவாய்ப்பு அதிகரிப்புடன் பணியமர்த்தலில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அதேபோல் வங்கி மற்றும் நிதி துறையைச் சேர்ந்த Unicorn நிறுவனங்கள் (மூலதனம் ரூ. 8000 கோடிக்கு மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள்) கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 30% அதிகமாக ஆட்சேர்ப்பு செய்துள்ளன. அதேபோல், கட்டிடக் கலை மற்றும் உள்துறை வடிவமைப்புத் துறை (Architecture & Interior Design) 2025 ஜூனில் ஆண்டு வளர்ச்சியில் 50% வேலைவாய்ப்பு உயர்வுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிறகு, கணக்கியல் மற்றும் நிதி துறை (Accounting/Finance) 34% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்தத் துறையில் மொத்தம் 6,989 வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல் மற்றும் பயணத் துறை 21% வளர்ச்சியுடன் 1,982 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பிறகு, BPO / ITES துறையில் 19% வேலைவாய்ப்பு உயர்வு பதிவாகியுள்ளது. BPO / ITES துறையில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு உயர்வுக்கு முக்கிய காரணம், ஜெய்ப்பூர் நகரத்தில் 64% மற்றும் பாரோடா நகரத்தில் 54% என்ற அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்ததுதான் என நௌக்ரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 முதல் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை தேவை 15% உயர்ந்துள்ளது. மேலும், 16 ஆண்டுக்கும் அதிக அனுபவம் உள்ளவர்கள் மீதான தேவையும் 15% உயர்வு கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ரியல் எஸ்டேட் (Real Estate) மற்றும் மருந்து / உயிர்த் தொழில்நுட்பத் துறைகள் குறிப்பிடப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+